News August 19, 2025
குழந்தைக்கு மாத்திரை தரும் போது கவனமா இருங்க!

குழந்தைகளுக்கு மாத்திரை கொடுக்கும் போது, கவனமாக இருக்க வேண்டியது அவசியம். சிறு மாத்திரை என்றாலும் அப்படியே கொடுப்பதால் பெரும் இன்னலை சந்திக்க நேரிடலாம். திருத்தணியில் மாத்திரையை அப்படியே முழுங்கியதால், சுவாசக்குழாயில் மாத்திரை சிக்கி, 4 வயது குழந்தை மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளது. மாத்திரையை பொடியாக்கி, தண்ணீரில் குழைத்துதான் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர்.
Similar News
News December 15, 2025
அஜித் குமார் மரணம்.. பரபரப்பான புதிய தகவல்

திருப்புவனம் கோயில் காவலாளி அஜித் குமார் கொலை வழக்கில், 6 போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர். 7-வது குற்றவாளியாக மானாமதுரை DSP சண்முக சுந்தரம் சேர்க்கப்பட்டிருந்தார். இந்நிலையில், திருப்புவனம் இன்ஸ்பெக்டர் ரமேஷ், SI சிவக்குமார், தலைமை காவலர் இளையராஜா பெயரும் சேர்க்கப்பட்டிருப்பது சிபிஐ குற்றப்பத்திரிகையில் தெரியவந்துள்ளது. இதன்மூலம், குற்றஞ்சாட்டப்பட்ட போலீசாரின் எண்ணிக்கை 10-ஆக அதிகரித்துள்ளது.
News December 15, 2025
காட்டில் வலம் வந்த மாளவிகா

தடோபா-அந்தாரி புலிகள் காப்பகக் காட்டில் சவாரி சென்று மகிழ்ந்த மாளவிகா மோகனன், அதன் போட்டோக்களை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். இதில், அவர் கேமராவுடன் வலம் வந்து, புகைப்படம் எடுத்து மகிழ்ந்துள்ளார். திரைப்பட கதாபாத்திரங்களில் மட்டுமல்லாமல், தனிப்பட்ட வாழ்க்கையிலும் தைரியமான, தனித்துவமான பெண்ணாக வலம் வருகிறார். இந்த போட்டோஸ் உங்களுக்கும் பிடிச்சிருந்தா ஒரு லைக் போடுங்க.
News December 15, 2025
மீண்டும் மழை வெளுக்கப் போகுது.. வந்தது அலர்ட்

தமிழகத்தில் கடந்த சில நாள்களாக மழை குறைந்து, பல இடங்களில் பனிமூட்டம் நிலவி வருகிறது. இந்நிலையில், நாளை(டிச.16) முதல் டிச.21 வரை தமிழகம், புதுவையில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக IMD அலர்ட் கொடுத்துள்ளது. சென்னையில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், தென் கடலோர மாவட்ட மீனவர்கள் டிச.18 வரை மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


