News August 6, 2024
வங்கதேச கலவர பலி 135ஆக உயர்வு

வங்கதேசத்தில் நேற்று நிகழ்ந்த கலவரத்தில் பலியானோர் எண்ணிக்கை 135ஆக உயர்ந்துள்ளது. வங்கதேசத்தில் நேற்று ஷேக் ஹசீனாவுக்கு எதிராக மீண்டும் மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் குதித்தனர். இதற்கு எதிராக ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியினரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவே, இருதரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. இதில் பலியானோர் எண்ணிக்கை 135 ஆக அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 22, 2026
அமெரிக்கா காலியாகிவிடும்: ஈரான் மிரட்டல்

அமெரிக்கா, தங்களது உச்ச தலைவர் அயதுல்லா அலி கொமேனி-வை தாக்க முயற்சித்தால் அவர்களின் உலகத்தை தீக்கிரையாக்கிவிடுவோம் என்று அமெரிக்காவுக்கு கடுமையான மிரட்டலை ஈரான் ஆயுத படை விடுத்துள்ளது. இதானால், தற்போது அமெரிக்கா – ஈரான் இடையே பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், என்னை படுகொலை செய்ய முயன்றால் ஈரானை அழித்துவிடுவோம் என்று டிரம்ப் பதிலடி கொடுத்துள்ளார்.
News January 22, 2026
ஏர் இந்தியாவால் டிக்கெட் விலை அதிகரிக்குமா?

ஏர் இந்தியா’ நிறுவனம் சென்னை – துபாய் இடையே 30 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வந்த விமான சேவையை மார்ச் 29 முதல் நிறுத்த இருக்கிறது. இதனால், பயணிகளுக்கு டிக்கெட் விலை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. முன்னதாக கொழும்பு சேவையை நிறுத்தியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தமிழகத்தில் இருந்து ஏர் இந்தியா வெளியேறுவது போல உள்ளதாக விமான போக்குவரத்து நிபுணர்கள் கூறுகின்றனர்.
News January 22, 2026
வெந்நீர் குடிப்பதன் நன்மைகள்

குடிநீரை கொதிக்க வைத்து குடிப்பது சிறந்தது மற்றும் பாதுகாப்பானது. வெந்நீர் குடிப்பதால் செரிமானம் மேம்படுத்துகிறது, மலச்சிக்கல் சீராகிறது, மற்றும் இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. சளி மற்றும் தொண்டை வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கிறது. மேலும், தினமும் காலையில் : எழுந்தவுடன் ஒரு டம்ளர் வெந்நீர் குடிப்பது நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க உதவும்.


