News August 5, 2024
வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா தப்பியோட்டம்?

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, தனது பதவியை ராஜினாமா செய்ததுடன், நாட்டை விட்டு தப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. தியாகிகளின் வாரிசுகளுக்கான இடஒதுக்கீடு விவகாரத்தில், ஷேக் ஹசீனா பதவி விலகக்கோரி, அங்கு நடந்த போராட்டம் கலவரமாக மாறியது. இதில், நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்த நிலையில், அங்கு நிலைமை மோசமாகியுள்ளது. இதனால் பிரதமர் பதவியை அவர் ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டு தப்பியதாக கூறப்படுகிறது.
Similar News
News January 17, 2026
திங்கள்கிழமை.. வந்தாச்சு மகிழ்ச்சியான செய்தி

₹3,000 அடங்கிய தமிழக அரசின் பொங்கல் பரிசை இதுவரை 2.15 கோடி ரேஷன் அட்டைதாரர்கள் பெற்றுள்ளனர். ஆனால் பொங்கலுக்காக ஊருக்கு சென்றவர்கள் பொங்கல் பரிசை பெற முடியாமல் உள்ளனர். இந்நிலையில், திங்கள்கிழமை (ஜன.19) முதல் விடுபட்டவர்களுக்கு ரேஷன் கடைகளில் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் எனவும், மறுஅறிவிப்பு வரும் வரை பொங்கல் பரிசு விநியோகம் தொடரும் என்றும் அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
News January 17, 2026
ஊருக்கே ஊற்றிக் கொடுத்த திமுக அரசு: நயினார்

பொங்கல் பண்டிகையில் ₹518 கோடிக்கு மது விற்பனையானதை சுட்டிக்காட்டி, உழவர் திருநாளன்று கூட உறுத்தாமல் ஊருக்கே ஊற்றிக் கொடுத்துள்ளது அறிவாலய அரசு என்று நயினார் விமர்சித்துள்ளார். பொங்கலுக்கு ₹3000 கொடுக்கிறோம் என ஊரெல்லாம் தம்பட்டம் அடித்துவிட்டு, அந்தப் பணத்தை டாஸ்மாக் வாயிலாக வசூலித்துள்ளது திமுக அரசு என சாடிய அவர், இதுபோன்ற ஒரு அரசு இனி தப்பித்தவறி கூட தமிழகத்தை ஆளக்கூடாது எனத் தெரிவித்துள்ளார்.
News January 17, 2026
பாம்பை வைத்து பொங்கல்.. தமிழ்நாட்டில் விநோதம்

காஞ்சிபுரம், சாத்தணஞ்சேரியில் இருளர் மக்கள் நல்ல பாம்பை பிடித்து பொங்கல் வைக்கும் பழக்கத்தை கடைப்பிடித்து வருகின்றனர். பொங்கலுக்கு 4 நாள்களுக்கு முன்பே பாம்பை பிடித்து, பானையில் அடைத்து வைத்து அதற்கு பூஜை செய்கின்றனர். பின்னர் காணும் பொங்கல் அன்று கிராமங்களில் உள்ள வீடுகளுக்கு பாம்பை எடுத்துச் சென்று, கற்பூர ஆரத்தி காட்டி வீட்டு வாசலில் படம் எடுக்கச் செய்யும் விநோத வழிபாடு நடந்து வருகிறது.


