News July 13, 2024
ஆருத்ரா வழக்கு: இதுவரை நடந்தது என்ன? (2/3)

ஆருத்ரா நிறுவனம் சொன்னதுபோல வட்டித் தொகையை வழங்கவில்லை என புகார் எழுந்தது. பாதிக்கப்பட்ட மக்கள் போலீஸில் புகார் கொடுத்தனர். இது குறித்து பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸார் நடத்திய விசாரணையில், இந்நிறுவனம் 1,09,259 பேரிடம் ₹2,438 கோடி மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து, இந்த நிறுவனத்தின் மீது வழக்கு பதிவு செய்யபட்டது, சொத்துகள் முடக்கப்பட்டன. அத்துடன் அதன் இயக்குநர்கள் கைது செய்யப்பட்டனர்.
Similar News
News July 8, 2025
தமிழ் சினிமாவில் மமிதா பைஜுவின் ஆதிக்கம்

‘பிரேமலு’ படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான மமிதா தற்போது தமிழில் முக்கிய நடிகையாக மாறியுள்ளார். விஜய் தொடங்கி தனுஷ் வரை முக்கிய ஹீரோக்களின் படத்தில் ஃபர்ஸ்ட் புக் செய்யப்படும் நடிகை மமிதா தான். விஜய்யின் ‘ஜனநாயகன்’, சூர்யாவின் 46-வது படம், பிரதீப் ரங்கநாதனின் ‘டியூட்’, விஷ்ணு விஷாலின் ‘இரண்டாம் வானம்’, தனுஷின் புதிய படம் உள்ளிட்ட 5 முக்கிய நடிகர்களின் படங்களில் மமிதா நடிக்கிறார்.
News July 8, 2025
இந்த பெண்ணுக்கு 16-ம் தேதி தூக்கு தண்டனை

ஏமன் சிறையில் இருக்கும் கேரள நர்ஸ் நிமிஷா பிரியா, இந்த மாதம் 16-ம் தேதி தூக்கிலிட இருப்பது இந்தியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2017-ல் தலால் அப்தோ மெஹ்தி என்பவரை கொலை செய்ததாக அவர் சிறையில் அடைக்கப்பட்டார். குற்றம் உறுதியானதால் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. நிமிஷாவின் தண்டனையை குறைக்க அவரது தாயார் போராடி வந்தார். எனினும் தூக்கிலிடப்படும் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
News July 8, 2025
இதை சாப்பிட்டா HEART ATTACK வரும்… எச்சரிக்கை!

பயன்படுத்திய சமையல் எண்ணெய்யை, மீண்டும் பயன்படுத்துவது ஆபத்தானது என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். இந்த உணவுகளை சாப்பிட்டால் இதயநோய், புற்றுநோய், உள்ளிட்ட நோய்கள் ஏற்படும் ஆபத்து அதிகரிக்கிறது. ஆனால், ஹோட்டல்களில் 60% அளவுக்கு, எண்ணெய் மீண்டும் பயன்படுத்தப்படுகிறதாம். டெல்லி, மும்பை, கொல்கத்தாவை ஒப்பிட சென்னை பரவாயில்லையாம். எனினும், வடை, பஜ்ஜி, போண்டா, சில்லி சிக்கன் சாப்பிடுமுன் யோசிக்கவும்.