News October 8, 2024
அண்ணல் காந்தியடிகள் பிறந்தநாள் பேச்சுப்போட்டி

அக்டோபர் 2ஆம் நாள் அண்ணல் காந்தியடிகள் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கடலூர் மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு 23.10.2024 அன்று கடலூர், மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள பொதுமக்கள் குறைதீர்வுக் கூட்ட அரங்கத்தில் பேச்சுப்போட்டிகள் நடைபெற உள்ளன.கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ/மாணவிகள் கலந்துகொண்டு பயன்பெறுமாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 14, 2025
கடலூர்: வீடு கட்ட ரூ.2.10 லட்சம் உதவி!

முதலமைச்சரின் பசுமை வீடு திட்டம் பற்றி தெரியுமா? வீடு இல்லமால் தவிக்கும் குடும்பங்களுக்கு இலவசமாக 300 சதுரடியில் ரூ.2.10 லட்சம் மதிப்பில் மழை நீர் சேகரிப்பு வசதி, 5 சூரிய சக்தியால் இயங்கும் CF விளக்கு வசதியுடன் வீடு கட்டி தரப்படும். இந்த திட்டத்தில் நீங்களும் பயனடைய வேண்டுமா? உங்கள் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் வீடு கட்டும் கனவு நிறைவேறும். இதனை ஷேர் பண்ணுங்க
News November 14, 2025
கடலூர்: மனைவி நோயால் பாதிப்பு-கணவன் தற்கொலை

கரிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த முத்தமிழ்செல்வன் (34) கம்ப்யூட்டர் சென்டரில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி பத்மினிக்கு தைராய்டு நோய் உள்ளதாக தெரிகிறது. இதனால் முத்தமிழ்செல்வன் கடும் மன அழுத்தத்தில் இருந்துள்ளார். இந்த நிலையில் நேற்று திடீரென்று வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து பத்மினி கொடுத்த புகாரின் பேரில் பரங்கிப்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News November 14, 2025
கடலூர் மாவட்டத்தில் பதிவான மழை அளவு

கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று (நவம்பர் 14) காலை 8:30 மணி நிலவரப்படி வேப்பூர் 32 மில்லி மீட்டர், லக்கூர் 14.3 மில்லி மீட்டர், மே.மாத்தூர் 14 மில்லி மீட்டர், பண்ருட்டி 3 மில்லி மீட்டர், புவனகிரி 3 மில்லி மீட்டர், காட்டுமைலூர் 3 மில்லி மீட்டர், பரங்கிப்பேட்டை 1.4 மில்லி மீட்டர் என மாவட்டம் முழுவதும் 70.7 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.


