News April 18, 2024

அக்பர் – சீதா, சிங்கங்களின் பெயர் மாற்றம்

image

மேற்கு வங்கத்தில் உள்ள உயிரியல் பூங்காவில் ஒரு ஆண் சிங்கத்திற்கு அக்பர் என்றும், பெண் சிங்கத்திற்கு சீதா என்றும் பெயர் வைக்கப்பட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த விஷ்வ ஹிந்து பரிஷத் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. இதில் சிங்கங்களின் பெயரை மாற்ற நீதிபதி உத்தரவிட்டார். இந்நிலையில், அக்பர் சிங்கத்திற்கு சூரஜ் என்றும், சீதா சிங்கத்திற்கு தயா என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

Similar News

News November 11, 2025

₹7,000 கோடி to ₹5,000 கோடி.. இழப்பை குறைக்கும் VI

image

வோடஃபோன் ஐடியா நிறுவனம், 2-வது காலாண்டின் ஒருங்கிணைந்த நிகர இழப்பை ₹5,524 கோடியாக குறைத்துள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ₹7,176 கோடியாக இருந்தது. அதேபோல், வருவாய் ₹11,194 கோடி (முன்பு ₹10,932 கோடி), ஒரு கஸ்டமரிடம் ஈட்டும் சராசரி வருவாய் ₹188-ஆக (முன்பு ₹166) உயர்ந்துள்ளது. முன்னதாக, வருவாய் இழப்பை சமாளிக்க முடியாமல், இந்நிறுவனம் இந்தியாவை விட்டு வெளியேறுவதாக வதந்தி பரவியது.

News November 11, 2025

டெல்லி குண்டு வெடிப்பு: கார் ஓனர் அடையாளம் தெரிந்தது

image

<<18252501>>டெல்லி குண்டு வெடிப்பில்<<>> ஈடுபடுத்தப்பட்ட கார் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. HR26 CE 7674 என்ற பதிவெண் கொண்ட அந்த காரானாது, ஹரியானாவின் குருகிராமைச் சேர்ந்த முகமது சல்மான் என்பவருக்கு சொந்தமானது. அவரை கைது செய்து போலீசார் விசாரித்த போது, ஜம்மு & காஷ்மீரின் புல்வாமா பகுதியைச் சேர்ந்த தாரிக் என்பவருக்கு காரை விற்றுவிட்டதாக தெரிவித்ததுள்ளார். அடுத்தக்கட்ட விசாரணையை போலீசார் முடுக்கிவிட்டுள்ளனர்.

News November 11, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: தெரிந்துவினையாடல் ▶குறள் எண்: 516 ▶குறள்: செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடு எய்த உணர்ந்து செயல். ▶பொருள்: முதலில் ஒரு செயலைச் செய்ய வேண்டியவனின் தகுதிகளை எண்ணி அவன் செய்ய வேண்டிய செயலின் தகுதியையும் எண்ணி பிறகு அவனையும் அச்செயலையும் செய்யப்படும் காலத்தோடு பொருத்தி எண்ணிச் செயல் செய்க.

error: Content is protected !!