News October 11, 2025
ஆப்கன் அமைச்சரின் பிரஸ்மீட் சர்ச்சை: மத்திய அரசு விளக்கம்

டெல்லியில் நேற்று நடந்த ஆப்கன் அமைச்சரின் செய்தியாளர்கள் சந்திப்பில் <<17974683>>பெண் செய்தியாளர்கள்<<>> அனுமதிக்கப்படாதது சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால், இதில் மத்திய அரசுக்கு எந்த சம்பந்தமும் இல்லை என மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆப்கன் தூதரக அதிகாரிகளே இந்த செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தியதாகவும், ஆப்கன் தூதரக விவகாரங்கள் இந்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் வராது என்றும் விளக்கம் அளித்துள்ளது.
Similar News
News December 17, 2025
தவெகவில் இணைந்தனர்.. கொங்குவில் அடுத்த விக்கெட்

செங்கோட்டையன் வருகைக்கு பிறகு, திமுக, அதிமுகவுக்கு போட்டியாக கொங்கு மண்டலத்தை தவெக வலுப்படுத்தி வருகிறது. இந்நிலையில், அமமுக பொதுக்குழு உறுப்பினர் கோவை நாகு உள்பட அமமுகவினர், புஸ்ஸி ஆனந்த் முன்னிலையில் தவெகவில் இணைந்தனர். ஈரோட்டில் நாளை விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின் போதும், மாற்றுக்கட்சியினர் இணைப்பு விழா நடைபெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
News December 17, 2025
தமிழகம் கேட்டது… மத்திய அரசு தந்தது: CM

கடந்த 4 ஆண்டுகளில் பேரிடர் பாதிப்புகளை எதிர்கொள்ள தமிழக அரசு கேட்ட நிதியில் (₹24,670 கோடி), வெறும் 17%-ஐ (₹4,130 கோடி) மட்டுமே மத்திய அரசு அளித்துள்ளதாக CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு காலநிலை மாற்றத்திற்கான நிர்வாக குழு கூட்டத்தில் பேசிய அவர், ‘எத்தனையோ பேரிடர்களை எதிர்கொண்டு வென்றதுபோல, காலநிலை மாற்ற சவாலையும் எதிர்கொண்டு, தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்’ என்று குறிப்பிட்டார்.
News December 17, 2025
₹1 லட்சத்துக்கு ₹74 லட்சம் வட்டி.. கிட்னியை விற்ற விவசாயி!

பால் பண்ணை வைக்க மகாராஷ்டிர விவசாயி, தினமும் ₹10,000 வட்டி என்ற கண்டிஷனுடன் ₹1 லட்சம் கடன் வாங்குகிறார். ஆனால், தொழிலுக்காக வாங்கிய மாடுகள் இறந்துவிட, நிலம், டிராக்டரை விற்றும் கடன் தீரவில்லை. கம்போடியா சென்று கிட்னியை ₹8 லட்சத்துக்கு விற்க, கடன்காரர்கள் வட்டியுடன் ₹74 லட்சம் வேணும் என்கின்றனர். வாழ்க்கை இருண்டுவிட, நீதி வேணும், இல்லனா குடும்பத்துடன் தீக்குளிப்பேன் என அவர் கண்ணீருடன் நிற்கிறார்.


