News May 14, 2024
மாணவி ஸ்ரீமதி மரண வழக்கு மே 28க்கு ஒத்திவைப்பு

கள்ளக்குறிச்சி அருகே கனியாமூர் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி கடந்த ஆண்டு மர்மமான முறையில் உயிரிழந்தார். இந்த வழக்கு கள்ளக்குறிச்சி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் நிலையில், இன்றைய விசாரணையில் பள்ளி முதல்வர், தாளாளர் ஆஜராகினர். அப்போது மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கண்காணிப்பு கேமரா பதிவு, மாணவியின் மொபைல் உரையாடலை வழங்க உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை மே 28க்கு ஒத்திவைத்தனர்.
Similar News
News December 11, 2025
நாகை: B.E படித்தவர்களுக்கு வேலை; தேர்வு இல்லை!

எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தில் உள்ள திட்ட பொறியாளர், டெக்னிக்கல் நிபுணர் உள்ளிட்ட பதவிகளுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 23
3. வயது: 21 – 33
4. சம்பளம்: ரூ.25,000 – ரூ.55.000
5. கல்வித்தகுதி: B.E
6. நேர்காணல் நாள்: 16.12.2025
7. மேலும் தகவலுக்கு <
8. மற்றவர்களும் பயன்பெற இதனை SHARE பண்ணுங்க.
News December 11, 2025
BREAKING: தங்கம் விலை தடாலடியாக மாறியுள்ளது

ஆபரணத் தங்கத்தின் விலை இன்றும் அதிகரித்துள்ளதால், நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹160 உயர்ந்து ₹96,400-க்கும், கிராமுக்கு ₹20 உயர்ந்து ₹12,050-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக, நேற்று ₹240, இன்று ₹160 என 2 நாளில் மொத்தம் சவரனுக்கு ₹400 உயர்ந்துள்ளது.
News December 11, 2025
‘கோல்ட் கார்டு விசா’: அறிமுகம் செய்தார் டிரம்ப்

அமெரிக்காவின் கோல்டு கார்டு விசா திட்டத்தை, டிரம்ப் அறிமுகப்படுத்தி வைத்தார். USA-ல் குடியேற்ற கொள்கைகள் கடுமையாக்கப்பட்டு வரும் அதேவேளையில், திறமையானவர்கள், பணக்காரர்களை ஈர்ப்பதற்காக இந்த திட்டம் அறிவிக்கப்பட்டது. இதில், $1 மில்லியன் (சுமார் ₹8.9 கோடி) செலுத்தினால் போதும், USA-ல் விரைவாக குடியுரிமை பெறலாம். இதனிடையே இது ‘பணக்காரர்களுக்கான திட்டம்’ என விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.


