News August 18, 2025
நடிகர் கோட்டா சீனிவாச ராவின் மனைவி ருக்மிணி காலமானார்

பிரபல தமிழ் நடிகர் கோட்டா சீனிவாச ராவ் கடந்த மாதம் மறைந்த நிலையில், இன்று(ஆக.18) அவரது மனைவி ருக்மிணி காலமானார். கணவரின் மறைவுக்கு பிறகு மன உளைச்சலால் உடல்நலக்குறைவுக்கு ஆளான அவர் ஹைதராபாத்தில் உள்ள ஹாஸ்பிடலில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 2010-ல் சாலை விபத்தில் இவர்களது மகன் கோட்டா வெங்கட ஆஞ்சநேய பிரசாத் பலியானது குறிப்பிடத்தக்கது.
Similar News
News December 12, 2025
BREAKING: அதிமுகவில் மீண்டும் இணைந்தார்

2021 தேர்தலில் விட்டதை பிடிக்க அதிமுகவும், 2026 தேர்தலில் ஆட்சியை தக்கவைக்க திமுகவும் புதிய வியூகங்களோடு தீவிரமாக பணியாற்றி வருகின்றன. குறிப்பாக அமமுக மற்றும் OPS அணியில் உள்ளவர்களை கட்சியில் சேர்ப்பதற்கு அதிமுக நிர்வாகிகளுக்கு EPS அசைன்மென்ட் கொடுத்துள்ளார். அந்த வகையில், திருவாரூர் அமமுக முக்கிய நிர்வாகியான வலங்கைமான் ஆறுமுகம் தனது ஆதரவாளர்களுடன் மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளார்.
News December 12, 2025
துபேதான் CSK-வின் 6-வது பவுலர்: அஸ்வின்

இந்திய அணியில் 6-வது பவுலராக சிறப்பாக செயல்படும் ஷிவம் துபேவை, சென்னை அணி பேட்ஸ்மேனாக மட்டுமே பயன்படுத்தி வருகிறது. இந்நிலையில் தன்னால் 6-வது பவுலராக CSK-வுக்கு இருக்க முடியும் என்பதை, தனது பவுலிங் திறன் மூலம் துபே நிரூபித்துள்ளதாக அஸ்வின் தெரிவித்துள்ளார். அவரை CSK சரியாக பயன்படுத்தவில்லை என கூறிய அஸ்வின், வரும் சீசனில் அது மாறலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
News December 12, 2025
நீதிபதியை பதவி விலக சொல்வது சரியல்ல: நயினார்

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிராக செயல்படுவது நாட்டுக்கு நல்லதல்ல என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். மேலும் அவரை பதவி நீக்கம் செய்யக்கோரி 100-க்கும் மேற்பட்ட MP-க்கள் கையெழுத்திட்டு லோக்சபா தலைவரிடம் நோட்டீஸ் வழங்கியது தவறான முன்னுதாரணம் என்றும் விமர்சித்துள்ளார். தனிப்பட்ட ஒரு கட்சியின் வாக்கு வங்கிக்காக இவ்வாறு செயல்படுவதாக அவர் சாடியுள்ளார்.


