News June 17, 2024
யார் தவறு செய்திருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்

நீட் தேர்வில் யார் முறைகேடு செய்திருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் எச்சரித்துள்ளார். மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்கிய விவகாரத்தில் மத்திய அரசுக்கு உடன்பாடு இல்லை என்ற அவர், இரு மையங்களில் முறைகேடு நடந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது என்றார். மேலும், இந்த விவகாரத்தை தீவிரமாக கவனித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 25, 2026
கனடா மீது 100% வரி பாயும்: டிரம்ப்

சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்தால், கனடாவில் இருந்து அமெரிக்காவுக்கு வரும் அனைத்து பொருட்களுக்கும் 100% வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் அறிவித்துள்ளார். அவர் ஒருபக்கம் வெனிசுலா, கிரீன்லாந்து நாடுகளை கைப்பற்றி வரும் வேளையில், சீனாவுடன் அமெரிக்காவின் அண்டை நாடான கனடா ஒப்பந்தம் மேற்கொள்ள தயாராகி வருகிறது. எனினும் இந்த 100% வரி அமலானால் இரு நாடுகள் இடையேயான பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்படும்.
News January 25, 2026
டி20 WC-ல் இருந்து பாகிஸ்தான் விலகலா?

வங்கதேசத்திற்கு அநியாயம் நடந்துள்ளது. ICC இரட்டை நிலைப்பாட்டுடன் இருக்க கூடாது என பாக்., கிரிக்கெட் வாரிய தலைவர் மொஹ்சின் நக்வி தெரிவித்துள்ளார். ஒரு அணி (இந்தியா) என்ன முடிவென்றாலும் எடுக்கலாம், அதற்கு சரி என்று அனுமதிப்பீர்கள்; ஆனால் மற்றொரு அணி அதைசெய்ய அனுமதி கிடையாதா என்றும், பாகிஸ்தானும் டி20 WC-ல் இருந்து விலகுமா என்பது அரசாங்கத்தின் முடிவில் தான் இருக்கிறது என்றும் கூறியுள்ளார்.
News January 25, 2026
TTV-க்கு 300 ‘C’ சாக்லேட்டுகள் கொடுக்கப்பட்டன: புகழேந்தி

ஊழல் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட அன்புமணி, தினகரன் ஆகியோருடன் ஒரு கூட்டணிக்காக PM மோடி கைகோர்க்கலாமா என முன்னாள் அதிமுக MLA புகழேந்தி கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் இப்போது அதிமுக என்ற கட்சியே இல்லை; அதை EPS அணி என்றுதான் அழைக்க வேண்டும் என்றும், நேற்று EPS-ஐ, ‘அண்ணன்’ என்று அழைத்து, கூட்டணி அமைத்ததற்காக TTV தினகரனுக்கு 300 ‘சி’ சாக்லேட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளன எனவும் அவர் கூறியுள்ளார்.


