News May 3, 2024
கையெழுத்து இயக்கம் தொடங்கிய ஆம் ஆத்மி

கெஜ்ரிவாலின் கைதை கண்டித்து, ஆம் ஆத்மி கட்சி சார்பில் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. மதுபான கொள்கை ஊழல் தொடர்பாக கைதான கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக, ஆம் ஆத்மி கட்சி பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது. இதுதொடர்பாக பேசிய ஆம் ஆத்மி எம்எல்ஏ பிரவீன் குமார், கெஜ்ரிவாலை சிறையில் அமைத்ததற்கு டெல்லி மக்கள் கோபத்தில் உள்ளதாகவும், இதற்கு வாக்குகளால் மக்கள் பதிலளிப்பார்கள் என்றும் அவர் கூறினார்.
Similar News
News November 8, 2025
BREAKING: டிச.1-ல் பார்லிமென்ட் கூடுகிறது

பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் டிச.1 முதல் 19-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தொடரில் ஜனநாயகத்தை வலுப்படுத்த ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடைபெற வேண்டும் என அமைச்சர் கிரண் ரிஜிஜூ வலியுறுத்தியுள்ளார். இதனிடையே, தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இந்த விவகாரத்தை பார்லிமென்ட்டில் எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
News November 8, 2025
மருத்துவ துறையின் லெஜண்ட் காலமானார்

DNA-வின் இரட்டைச் சுருள் வடிவமைப்பை கண்டறிந்தவர்களில் ஒருவரும், நோபல் பரிசு பெற்றவருமான ஜேம்ஸ் வாட்சன் (97) காலமானார். நவீன உயிரியலில் பெரும் வளர்ச்சிக்கு வழிவகுத்த அந்தக் கண்டுபிடிப்பால், உடலில் மரபணு எப்படி வேலை செய்கிறது என்பதைக் கண்டறிய முடிந்தது. இதனால், மருத்துவம், தடயவியல் போன்ற துறைகளில் கூடுதல் தொழில்நுட்பத்தைக் கொண்டுவர முடிந்தது. அவரது மறைவுக்கு பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
News November 8, 2025
தஞ்சை பல்கலை.,யில் ஆந்திர மாணவன் விபரீத முடிவு!

தஞ்சாவூரில் உள்ள சாஸ்த்ரா பல்கலை.,யில் ஆந்திராவை சேர்ந்த பி.டெக் மாணவன் அபினவ், 4-வது மாடியிலிருந்து குதித்ததால் உயிருக்கு ஆபத்தான நிலையில், ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வருகிறார். முதல்கட்ட விசாரணையில், வகுப்பறையில் செல்போன் பயன்படுத்தியதை பேராசிரியர் கண்டித்ததால், அபினவ் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளது தெரியவந்துள்ளது.


