News August 7, 2025

பள்ளிகளிலேயே ஆதார் பயோமெட்ரிக்.. அரசு அறிவிப்பு

image

அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கு ஆதார் பயோமெட்ரிக்கை புதுப்பிக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, 5 – 7 வயதுக்குட்பட்ட 8 லட்சம் மாணவர்கள் முதல்முறை கட்டாய பயோமெட்ரிக் விவரங்களை புதுப்பிக்க வேண்டும் என்றும், 15- 17 வயதுக்குட்பட்ட 7 லட்சம் மாணவர்கள் 2-வது முறை புதுப்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் முகாம் அமைத்து அஞ்சல் துறை இந்த பணிகளை மேற்கொள்ளும்.

Similar News

News November 13, 2025

2-வது சிம்பொனியை அரங்கேற்றும் இளையராஜா

image

‘ராஜாவுக்கெல்லாம் ராஜா இந்த இளையராஜா’ என்று ரசிகர்கள், தலைமுறை தாண்டியும் உருகி வருகின்றனர். இதனிடையே, தனது முதல் சிம்பொனியை, லண்டனில் உள்ள Eventim Apollo Theatre-ல் இளையராஜா அரங்கேற்றம் செய்தார். இதன்மூலம், ஒட்டுமொத்த இசை உலகையே தமிழகத்தை நோக்கி திரும்பி பார்க்க வைத்தார். இந்நிலையில், தனது 2-வது சிம்பொனியை நவ.17-ல் ஹங்கேரியில் உள்ள Eötvös Loránd University-ல் அரங்கேற்றம் செய்யவுள்ளார்.

News November 13, 2025

கமலை மழுங்க செய்தவர் ஸ்டாலின்: ஆர்.பி.உதயகுமார்

image

தன்னை எதிர்த்து கட்சி தொடங்கிய கமல்ஹாசனை அதிகாரத்தால் ஸ்டாலின் மழுங்க செய்துவிட்டார் என ஆர்.பி. உதயகுமார் விமர்சித்துள்ளார். கமல்ஹாசனின் பிறந்தநாள் விழாவிற்கு தன்னுடைய குடும்பத்துடன் சென்ற ஸ்டாலின், கட்சிக்காக உழைத்த தொண்டர்கள் இல்லத்திற்கு செல்வதில்லை எனவும் சாடியுள்ளார். தனது Failure மாடல் அரசின் செயல்பாடுகளை மறைக்க, தன்னை எதிர்க்கும் போர்வாளை திமுக மழுங்கடிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

News November 13, 2025

SIR-ஐ ஒத்திவைக்க கோரிய கேரளா: ECI எதிர்ப்பு

image

SIR-க்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் SC-ல் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில், SIR பணிகளை ஒத்திவைக்க கோரி கேரள அரசு, மாநில ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளது. உள்ளாட்சி தேர்தல் மற்றும் SIR பணிகளை ஒரே நேரத்தில் மேற்கொள்வது மாநில நிர்வாகத்திற்கு அழுத்தத்தை தருவதாக அரசு வாதிட்ட நிலையில், ECI இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

error: Content is protected !!