News October 17, 2025

கருணைக்கொலையை அனுமதிக்கும் சட்டம் வந்தது

image

உருகுவேயில் தீராத மனநலம், உடல்நலம் பிரச்னைகள் உள்ளவர்களை கருணைக்கொலை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, டாக்டர்கள் செய்யும் கருணைக்கொலை அனுமதிக்கப்படும். ஆனால், நோயாளியே மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்துகொள்ள கூடாது. மேலும், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் கருணைக்கொலையை தேர்ந்தெடுக்க விரும்பினால், டாக்டர்களின் அனுமதியை அதற்கு பெற வேண்டும். இதுபற்றி என்ன நினைக்கிறீங்க?

Similar News

News November 11, 2025

BREAKING: 2026-ல் 24 நாள்கள் விடுமுறை.. அரசு அறிவிப்பு

image

2026-ம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாள்கள் அட்டவணையை தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி, அடுத்தாண்டில் 24 நாள்கள் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. புத்தாண்டு, பொங்கல், குடியரசு தினம், தைப்பூசம், மகாவீரர் ஜெயந்தி, ரம்ஜான், புனித வெள்ளி, சுதந்திர தினம், விநாயகர் சதுர்த்தி, காந்தி ஜெயந்தி, ஆயுத பூஜை, தீபாவளி, கிறிஸ்துமஸ் உள்ளிட்ட 24 நாள்கள் விடுமுறை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 11, 2025

எல்லாருக்கும் ஐடியா கொடுத்தாரு… ஆனா அவருக்கு?

image

பிஹார் தேர்தல் கருத்துக் கணிப்புகளில் தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி 0-7 இடங்கள் வெல்லும் என்றும், 9 – 13% வாக்குகள் பெறும் எனவும் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து, பெரிய கட்சிகளுக்கு எல்லாம் வியூகம் வகுத்துக் கொடுத்து வெற்றிபெற வைத்த பிரசாந்த் கிஷோரால், தன் கட்சிக்கு வெற்றியை தரமுடியவில்லை எனப் பலரும் கருத்து தெரிவிக்கின்றனர். இதுபற்றி உங்களின் கருத்து?

News November 11, 2025

தோட்டா தரணிக்கு செவாலியே விருது அறிவிப்பு

image

கலை இயக்குநர் தோட்டா தரணிக்கு செவாலியே விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான செவாலியே விருதை, நவ.13-ம் தேதி சென்னையில் உள்ள பிரான்ஸ் கலாசார மையத்தில் அவர் பெறவுள்ளார். 2 தேசிய விருதுகள், பத்ம ஸ்ரீ, தமிழ்நாடு அரசின் விருது உள்ளிட்டவற்றை வென்ற அவரது கலைப் பயணத்தில் செவாலியே விருது மேலும் ஒரு மைல்கல்லாக அமைந்துள்ளது. தோட்டா தரணிக்கு பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

error: Content is protected !!