News August 22, 2024

தூத்துக்குடியில் 106 ரயில் நிலையங்களில் புதிய வசதெி

image

திருச்செந்தூர், நாசரேத் உள்பட 106 ரயில் நிலையங்களில் க்யூஆர் கோடு மூலம் டிக்கெட் பெறும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மதுரை கோட்டத்தில் நெல்லை, தூத்துக்குடி உள்பட 106 ரயில் நிலையங்களில் க்யூஆர் கோடு மூலம் டிக்கெட் பெறும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. தெற்கு ரயில்வேயில் பயணிகளின் தேவையற்ற காத்திருப்புகளை தவிர்த்து, துரித பயணங்களுக்கு பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.

Similar News

News December 9, 2025

தூத்துக்குடி: மொட்டை மாடியில் தவறி விழுந்து தொழிலாளி பலி

image

முள்ளக்காடு அருகே உள்ள அத்திமரபட்டி பொன்னகரத்தை சேர்ந்தவர் முத்துமாரி (49). மரம் வெட்டும் தொழிலாளியான இவர், நேற்று தனது வீட்டு மொட்டை மாடியில் இருந்து அருகில் உள்ள பனை மரத்தின் ஓலைகளை வெட்டிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென்று கால் இடறி வீட்டின் கீழே இருந்த கழிவறையில் விழுந்து பலத்த காயமடைந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற இவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

News December 9, 2025

தூத்துக்குடி: புதிய வாக்காளர்கள் கவனத்திற்கு…

image

புதிதாக வாக்காளர் பட்டியலில் சேர்க்க இன்று (டிச.9, செவ்வாய்) முதல் விண்ணப்பிக்கலாம்.18 வயது பூர்த்தியடைந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கலாம். தேவையான ஆவணங்கள்: 1.ஆதார் கார்டு, 2.போட்டோ 1, 3.பிறப்புச்சான்றிதழ், 4.பள்ளிச் சான்றிதழ் (TC), இன்று அருகில் உள்ள மையங்களில் நேரில் சென்று விண்ணப்பிக்கலாம். டிசம்பர் 9 முதல் ஜனவரி 8 வரை விண்ணப்பிக்கலாம் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார்.

News December 9, 2025

தூத்துக்குடி ரயில் பயணிகளே.. கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் இதோ

image

கிறிஸ்மஸ் பண்டிகையையொட்டி கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் மைசூரில் இருந்து தூத்துக்குடிக்கு சிறப்பு ரயில் விடப்படுகிறது. வரும் டிச. 23, 27 தேதிகளில் மைசூரில் இருந்து மாலை 6.35 மணிக்கு புறப்படும் ரயில் அடுத்த நாள் காலை 11 மணிக்கு தூத்துக்குடி வந்தடையும். தூத்துக்குடியில் இருந்து 24 மற்றும் 28 தேதிகளில் மதியம் 2 மணிக்கு புறப்படும் ரயில் அடுத்த நாள் காலை 7:45 மணிக்கு மைசூரு சென்றடையும். SHARE

error: Content is protected !!