News July 23, 2024

ஆந்திராவுக்கு ஆக்சிஜன் கிடைத்துவிட்டது: சந்திரபாபு

image

ஆந்திராவின் பல்வேறு வளர்ச்சித்திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்ததற்காக, மத்திய அரசுக்கு
அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு நன்றி தெரிவித்துள்ளார். வென்டிலேட்டரில் இருந்த தங்கள் மாநிலத்திற்கு, தற்போது ஆக்சிஜன் கிடைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், இது தொடக்கமே என்றும் கூறியுள்ளார். ஆந்திராவை மறுகட்டமைக்க மத்திய அரசு செய்யும் இத்தகைய உதவிகள் தொடரும்
எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.

Similar News

News December 2, 2025

99% பேருக்கு SIR படிவங்கள் கொடுத்துவிட்டோம்: ECI

image

தமிழகத்தில் நவ.4 முதல் SIR பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், 99.20% வாக்காளர்களுக்கு SIR படிவங்கள் வழங்கப்பட்டுள்ளதாக ECI தெரிவித்துள்ளது. அதாவது தமிழகத்தில் மொத்தமுள்ள 6.41 கோடி வாக்காளர்களில், 6.35 கோடிக்கும் மேற்பட்டோருக்கு SIR படிவம் கொடுத்துள்ளதாக கூறியுள்ளது. இதில், 91.49% படிவங்கள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் ECI அறிவித்துள்ளது.

News December 2, 2025

மக்கள் நாயகன் காலமானார்

image

தேசத்திற்காக எண்ணற்ற போர்களில் களம் கண்ட Lt Col ஜம்வால் (100) வயது மூப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். பிரிட்டிஷ் இந்திய ராணுவம் & இந்திய ராணுவத்தில் பணியாற்றிய ஒரு சில வீரர்களில் இவரும் ஒருவர். 1947-48 இந்தோ-பாக் போரின் போது, C படைப்பிரிவின் குதிரைப்படை தளபதியாக செயல்பட்ட ஜம்வால், கடினமான zojila கணவாயை கடந்து எதிரிகளை தாக்கினார். நாட்டை காத்த ரியல் ஹீரோ மறைவுக்கு பலரும் இரங்கல் கூறி வருகின்றனர்.

News December 2, 2025

IPL 2026: அடுத்தடுத்து விலகும் முன்னணி நட்சத்திரங்கள்!

image

மேக்ஸ்வெல்லை PBKS அணி தக்கவைக்காத நிலையில், அவர் தனது பெயரை IPL மினி ஏலத்திற்கு பதிவு செய்யவில்லை. இதனால் அவர் 2026 தொடரில் விளையாடமாட்டார் என கூறப்படுகிறது. அதே போல, KKR வீரர் <<18444409>>மொயின் அலி<<>>யும், PSL தொடரில் பங்கேற்க இருப்பதாக அறிவித்துள்ளார். ஆகையால், அவரும் IPL-ல் விளையாட மாட்டார். முன்னதாக, KKR-ன் ரஸல் ஓய்வை அறிவித்த நிலையில், DC-ன் டூ பிளெஸ்ஸிஸ் தொடரில் இருந்து விலகுவதாக தெரிவித்திருந்தார்.

error: Content is protected !!