News June 13, 2024

உ.பி.யில் நடந்த கொடூரம். தாயின் வெறிச் செயல்

image

உத்தரபிரதேசத்தின் பிஜ்னோர் பகுதியைச் சேர்ந்தவர் ஆதேஷ் தேவி. மனநலம் பாதிக்கப்பட்டவரான இவருக்கு, நான்கு வயதில் மகன் உள்ளது. இந்த நிலையில், வேலைக்குச் சென்ற கணவன் வீடு திரும்பியதும், மகன் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்து போலீசில் புகார் அளித்துள்ளார். விசாரணையில், தாய் தேவி, குழந்தையின் கழுத்தை அறுத்து, வீட்டில் இருந்த அடுப்பில் வைத்து உடலை எரிக்க முயன்றது தெரியவந்துள்ளது.

Similar News

News November 12, 2025

BREAKING: கூட்டணி முடிவை எடுத்தார் பிரேமலதா

image

தேமுதிக தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் பிரேமலதா ஆலோசனை நடத்தி வருகிறார். இதில், பெரும்பாலானோர் 15 தொகுதிகளுக்கு மேல் கொடுக்கும் கட்சியுடனும், சிலர் அதிமுகவுடனும் கூட்டணி அமைக்க வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. நிர்வாகிகள் கருத்துகளை அமைதியாக கேட்டுக்கொண்ட பிரேமலதா, உங்களின் விருப்பப்படி முடிவு எடுக்கப்படும் என்று உறுதியளித்ததாக கூறப்படுகிறது.

News November 12, 2025

சென்னை, கோவை பாதுகாப்பான நகரம்: அமைச்சர்

image

TN-ல் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என எதிர்க்கட்சிகள் பொய்யான புகார்களை கூறுவதாக கீதா ஜீவன் தெரிவித்துள்ளார். இந்தியாவின் பாதுகாப்பான நகரம் சென்னை, கோவைதான் என மத்திய அரசின் புள்ளி விவரம் கூறுவதாக தெரிவித்த அவர், பாதிக்கப்பட்ட பெண்கள் திமுக ஆட்சியில்தான் தைரியமாக புகார் தருகிறார்கள் என கூறியுள்ளார். மேலும், சமூக நலத்துறை முறையாக நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.

News November 12, 2025

எனக்கும் கடன் பிரச்னைகள் இருக்கு: விஜய் சேதுபதி

image

கோடிகள் சம்பாதிக்கும் தனக்கும் கடன் பிரச்னைகள் உள்ளதாக நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பேசிய அவர், தான் ஆயிரத்தில் சம்பாதித்தபோது அதற்கான கடன் இருந்தது, லட்சத்தில் சம்பாதித்தபோதும் அதற்கான கடன் இருந்ததாக குறிப்பிட்டார். தற்போது கோடிகளில் சம்பாதித்தாலும் கடன் பிரச்னை தீரவில்லை என்று கூறிய அவர், அதனுடன் வாழ கற்றுக்கொண்டு விட்டதாக தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!