News June 12, 2024
ஜூன் 29 வரை சட்டமன்றக் கூட்டத் தொடர்

தமிழகத்தில் ஜூன் 20 முதல் 29 வரை சட்டமன்றக் கூட்டத்தொடர் நடைபெறும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். தலைமைச் செயலகத்தில் இன்று காலை அலுவல் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அப்போது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வழக்கமாக 10 மணிக்குத் தொடங்கும் பேரவை, இந்தமுறை 9 மணிக்கே தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விக்கிரவாண்டி இடைத் தேர்தல் காரணமாக குறைந்த நாட்களே பேரவை நடத்தப்படுகிறது.
Similar News
News November 12, 2025
National Roundup: PM தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம்

*ஜனாதிபதி முர்முவுக்கு போட்ஸ்வானா நாட்டில் பாரம்பரிய வரவேற்பு. *டெல்லி கார் குண்டு வெடிப்பு தொடர்பாக PM மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம். *இந்தியாவின் புது அமெரிக்க தூதராக செர்ஜியோ கோர் நியமனம். *பதற்றங்களுக்கு மத்தியில் PAK எல்லையில் இந்திய ராணுவம் பயிற்சி. *மேகதாது அணையால் TN-க்கு பாதிப்பு இல்லை சித்தராமையா உறுதி. *டெல்லி குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு ₹10 லட்சம் இழப்பீடு.
News November 12, 2025
விஜய்யால் அதிமுகவில் ஏற்பட்ட குழப்பம்

தவெக உடன் கூட்டணி அமையாவிட்டால், பல அதிமுக தலைவர்கள் போட்டியிட தயங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விஜய்யின் வசீகரம் + பெரிய கூட்டணி இல்லாமல், போட்டியிட ரெடியாக இல்லை என மாவட்ட, உள்ளூர் தலைவர்கள் EPS-க்கு தகவல் அனுப்ப தொடங்கியுள்ளார்களாம். தேர்தல் பிரசாரங்களுக்கு தொகையை செலவிடுவதிலும் சுணக்கம் காட்டி வருகிறார்களாம். விஜய்யின் இருப்பு பல தொகுதிகளின் வெற்றியை தீர்மானிக்கும் என்றும் கருதுகின்றனர்.
News November 12, 2025
4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்

தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக IMD தெரிவித்துள்ளது. இதன்காரணமாக நெல்லை மாவட்ட மலைப்பகுதிகள், ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், மஞ்சள் அலர்ட் விடுத்துள்ளது. மேலும், வரும் 17-ம் தேதி வரை தமிழகத்தின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.


