News December 8, 2025
எடப்பாடி சிறுமி புகைப்படத்தை வெளியிட்டதால் விபரீதம்!

எடப்பாடியை சேர்ந்த கட்டடத் தொழிலாளி அண்ணாமலை (32) என்பவர், 14 வயது சிறுமியை காதலிப்பதாகக் கூறி அவரை பின்தொடா்ந்துள்ளாா். இதுதொடா்பாக சிறுமியின் பெற்றோா் அண்ணாமலையைக் கண்டித்தனா். இந்தநிலையில் சிறுமியுடன் அவா் எடுத்த புகைப்படத்தை கடந்த 5 ஆம் தேதி சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளாா்.இதில் மனமுடைந்த சிறுமி தற்கொலை செய்து கொள்ள முயன்றுள்ளார்.சங்ககிரி போலீஸாா் வழக்குப் பதிந்து அண்ணாமலையைக் கைதுசெய்தனர்.
Similar News
News December 9, 2025
சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்!

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.
News December 8, 2025
சேலம்: முதல் நிலை சரிபார்த்தல் – ஆட்சியர் தகவல்!

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, 2026 தேர்தலில் சேலத்தில் பயன்படுத்தப்படும் 8,412 வாக்குப்பதிவு எந்திரங்கள், 4,888 கட்டுப்பாட்டு கருவிகள், வாக்கு அளிக்கும் கருவிகளை பெங்களூர் பெல் நிறுவனத்தின் பொறியாளர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில், வருகின்ற டிசம்பர்-11ம் தேதி முதல்நிலை சரிபார்த்தல் பணி நடைபெறும் என சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி தெரிவித்துள்ளார்.
News December 8, 2025
சேலம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை கௌரவிக்கும் விதமாக, தமிழக அரசு ஆண்டுதோறும் சமூக நீதி பெரியார் விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பு ஆண்டிற்கான விருது பெற தகுதி உடையவர்கள், தங்களது முழு விவரங்களை பூர்த்தி செய்து வருகின்ற 18ம் தேதிக்குள் விண்ணப்பங்களை ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள நலத்துறை அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டுமென, சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி தெரிவித்துள்ளார்.


