News November 14, 2025
விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்த ஆட்சியர்

இராணிப்பேட்டை ஆட்சியர் முனைவர்.ஜெ.யு. சந்திரகலா, இ.ஆ.ப., ராணிப்பேட்டை முத்துக்கடை பேருந்து நிறுத்தத்தில் இன்று (நவ.14) தேசிய குழந்தைகள் தினத்தையொட்டி கல்லூரிமாணவ, மாணவியர்கள் கலந்து கொண்ட Walk For Children விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பல்வேறு கல்லூரி மாணவ மாணவியர்கள் பங்கேற்றனர்.
Similar News
News November 14, 2025
மாணவர்களுக்கு சாக்லேட் வழங்கிய ஆட்சியர்

கட்டளை ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப்பள்ளியில் இன்று (நவ.14) தேதி ஆட்சியர் சந்திரகலா திடீர் ஆய்வு செய்தார் .அப்போது குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு மாணவ மாணவிகளுக்கு ஆட்சியர் சந்திரகலா சாக்லேட் வழங்கினார்.மேலும் பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பாடம் எவ்வாறு எடுக்கிறார். மாணவர்களின் கற்றல் மற்றும் எழுதும் திறன் எப்படி உள்ளது என்று ஆட்சியர் ஆய்வு செய்தார்.
News November 14, 2025
எஸ் ஐ ஆர் படிவம் பதிவேற்றம் ஆட்சியர் அறிவுரை

கொண்டாபுரம் கிராமத்தில் இன்று (நவ.14)
தேதி எஸ் ஐ ஆர் கணக்கீட்டு படிவங்கள் பதிவேற்றம் செய்வது குறித்து ஆட்சியர் சந்திரகலா ஆய்வு செய்தார். அப்போது வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் படிவங்கள் பதிவேற்றம் செய்யும்போது எந்தவித தவறும் செய்யக்கூடாது. கவனத்துடன் செயல்பட வேண்டும் என்று அறிவுரை வழங்கினார் நெமிலி வட்டாட்சியர் ராஜலட்சுமி உடன் இருந்தார்.
News November 14, 2025
காவேரிப்பாக்கம் பகுதியில் கைபேசி சேவையியல் ஆய்வு

(நவ.14) காவேரிப்பாக்கம் ஊராட்சியில் கைபேசி பயன்பாடு, SIR படிவம் மற்றும் வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு குறித்து அதிகாரிகள் நேரடியாக வீடு தோறும் சென்று மக்களிடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். கைபேசி சேவையில் குறைகள், வாக்காளர் பட்டியல் விவரங்கள் மற்றும் பொதுசேவை தொடர்பான கேள்விகள் உள்ளிட்டவற்றை மக்கள் முன்வைத்தனர். அதிகாரிகள் ஒவ்வொன்றாக பதிவு செய்து தீர்வு காணப்படும் என உறுதியளித்தனர்.


