News November 14, 2025
திண்டுக்கல் சிறுமியை சீரழித்த இளைஞர்: அதிரடி தீர்ப்பு!

திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்தாக அருள் பிரசாத் (21) என்ற இளைஞர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கின் இறுதிக் கட்ட விசாரணையின் முடிவில், திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றம் அருள் பிரசாத்திற்கு 15 ஆண்டுகள் சிறை, ரூ.5,000 அபராதம் விதித்தது.
Similar News
News November 14, 2025
குஜிலியம்பாறையில் இறப்பிலும் இணைந்த தம்பதி!

குஜிலியம்பாறை பஸ் ஸ்டாண்ட் எதிரே மருத்துவமனை நடத்தி வந்த டாக்டர் தங்கவேல் (67) நேற்று முன்தினம் மாலை உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இதனை கண்ட அவரது மனைவி சிவஜோதி (60) கதறி அழுதபடியே மயங்கி விழுந்து உயிரிழந்தார். இதையடுத்து கணவன்-மனைவி இருவருக்கும் ஒரே நேரத்தில் இறுதி சடங்குகள் செய்து உடல்கள் ஒன்றாக மணியகாரன்பட்டியில் அடக்கம் செய்யப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
News November 14, 2025
திண்டுக்கல்: இனி வங்கியில் வரிசை-ல நிக்காதீங்க!

மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்! SBI-09223766666,HDFC – 18002703333, AXIS – 18004195959, Union Bank – 09223008586, Canara Bank – 09015734734,BOB – 8468001111,Indian Bank – 9677633000, IOB – 96777 11234! மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க!
News November 14, 2025
ஒட்டன்சத்திரத்தில் தொழிலாளி துடிதுடித்து பலி!

ஒட்டன்சத்திரம் அருகே காப்பிலியபட்டி கிராமத்தைச் சேர்ந்த 46 வயது கட்டத் தொழிலாளி பெருமாள், நேற்று ஒட்டன்சத்திரம்-தாராபுரம் சாலையில் தனியார் கட்டடத்தில் மின்தூக்கி இயக்கி பணியாற்றும்போது 3-ஆவது மாடியிலிருந்து விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஒட்டன்சத்திரம் போலீஸ் சம்பவத்தை விசாரித்து வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


