News November 14, 2025
பெரம்பலூர்: போலி மருத்துவர் கைது!

பென்னக்கோணத்தை சேர்ந்த கதிர்வேல் (33) என்பவர் தனது வீட்டின் அருகே, மருத்துவம் படிக்காமல் போலியாக மருத்துவம் பார்பதாக சுகாதாரத்துறை இணை இயக்கு மாரிமுத்துக்கு வந்த தகவலின் படி அவர் நேரில் சென்று திடீர் ஆய்வு செய்தார். அப்போது கதிர்வேல் மெடிக்கல் நடத்தி மருத்துவம் பார்த்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து மங்களமேடு போலீசார், அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News November 14, 2025
பெரம்பலூர்: இவ்வளவு பழமையான இடங்களா?

பெரம்பலூர் மாவட்டம் 12 கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடலுக்குள் இருந்த்தாக சொல்லப்படுகிறது. அவ்வாறு இருக்க அங்குள்ள பழமையான இடங்களை நாம் காண்போம்
1. வாலிகண்டபுரம் வாலீஸ்வரர் கோயில் – 1100 ஆண்டுகள் பழமை
2.இரஞ்சன்குடி கோட்டை – 600 ஆண்டுகள் பழமை
3. கல்மரம் – 120 மில்லியன் ஆண்டுகள் பழமை
4. பாலதண்டபாணி கோயில் – 800 ஆண்டுகள் பழமை
இத்தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
News November 14, 2025
பெரம்பலூர்: ரூ.88,635 சம்பளத்தில் வேலை ரெடி!

ECGC Limited நிறுவனத்தில் காலியாக உள்ள Probationary Officer (PO) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. சம்பளம்: ரூ.88,635 – ரூ.1,69,025/-
3. கல்வித் தகுதி: Any Degree
4. வயது வரம்பு: 21 – 30 (SC/ST-35, OBC-33)
5. கடைசி தேதி: 02.12.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News November 14, 2025
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

பெரம்பலூர் மாவட்டத்தில், முன்னாள் படைவீரர் நலத்துறையின் சார்பில் முன்னாள் படைவீரரின் மனைவி, கைம்பெண் மற்றும் திருமணமாகாத மகள்களுக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 40 வயதிற்குட்பட்ட, அரசு அல்லது அரசு சார்ந்த நிறுவனத்தில் தையல் பயிற்சி முடித்து சான்று பெற்றவர்கள் நவ.30க்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.


