News November 14, 2025
தன வரவு அதிகரிக்கும் மகாலட்சுமி வழிபாடு!

வெற்றிலையை பன்னீரில் சுத்தம் செய்து, அதன் நடுப்பகுதியில் சந்தனத்தை வட்ட வடிவில் இடவும். அதன் நடுவில் குங்குமப் பொட்டு வைக்கவும். தாம்பாள தட்டின் மேல் இந்த வெற்றிலையை,
மகாலட்சுமியாக பாவித்து மலர்களாலோ, அட்சதையாலோ, நாணயங்களாலோ அர்ச்சனை செய்யலாம். அர்ச்சனையின் போது, பின்வரும் மந்திரத்தை 108 முறை கூறுங்கள். ‘ஓம் தன தான்யாதிபதயே நமஹ’. இந்த ஆன்மிக பதிவை அனைவரும் அறிய ஷேர் பண்ணுங்க.
Similar News
News November 14, 2025
மதவாதம் இருக்குமிடத்தில் EPS இருக்க மாட்டார்: KTR

EPS இருக்கும் இடத்தில் மதவாதம் இருக்காது, மதவாதம் இருக்கும் இடத்தில் EPS இருக்க மாட்டார் என்று KT ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார். மதவாத சக்தியோடு அதிமுக கூட்டணி வைத்துள்ளதாக திமுக உள்ளிட்ட I.N.D.I.A கூட்டணி கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில், இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும், நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பாஜக உடன் கூட்டணி வைப்பதில் என்ன தவறு என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
News November 14, 2025
முன்னிலை வகிக்கும் பாஜகவின் ஸ்டார் வேட்பாளர்கள்

பிஹார் சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பாஜகவின் ஸ்டார் வேட்பாளர்கள் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றனர். ➤தாராபூர் தொகுதி: DCM சாம்ராட் சவுத்ரி முன்னிலை ➤அலிநகர் தொகுதி: பாடகி மைதிலி தாக்குர் முன்னிலை ➤லக்கிசராய் தொகுதி: DCM விஜய் குமார் சின்ஹா முன்னிலை ➤கதிஹார் தொகுதி: முன்னாள் துணை முதலமைச்சரும், பாஜக வேட்பாளருமான தர்கிஷோர் பிரசாத் முன்னிலை வகித்து வருகிறார்.
News November 14, 2025
தபால் வாக்குகள்… அமலுக்கு வந்த புதிய நடைமுறை

தற்போதுள்ள முறையில், முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். ஆனால், அதன் முடிவுகள் பதிவான வாக்குகள் அனைத்தும் எண்ணப்பட்டு, கடைசி சுற்று முடிந்தபின் தான் அறிவிக்கப்படும். ஆனால், பிஹார் தேர்தலில் நடைமுறைக்கு வந்த புதிய நடைமுறையில், கடைசி இரண்டு சுற்றுக்கு முன்பாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். கடைசி நேரத்தில் ஏற்படும் சர்ச்சையை தவிர்க்க இம்முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


