News November 14, 2025
புதுக்கோட்டை: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று (நவ.13) இரவு 10 மணி முதல் இன்று (நவ.14) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!
Similar News
News November 14, 2025
புதுகை: மின்சாரம் தாக்கி மேலாளர் உயிரிழப்பு!

விராலிமலை ஒன்றியம் செங்களூர் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான கோழி பண்ணையில் கந்தர்வக்கோட்டையை சேர்ந்த முரளி (30), என்பவர் மேலாளராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், கோழிகளை பராமரிப்பு செய்யும் பணியில் ஈடுபட்டபோது மின்சாரம் தாங்கி தூக்கி வீசப்பட்டார். தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனை அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
News November 13, 2025
கந்தர்வகோட்டை அருகே சூதாட்டிய 4 பேர் கைது

கந்தர்வகோட்டை அடுத்த மஞ்சம்பேட்டை குளக்கரை அருகே நேற்று உதயகுமார் (37), ராஜா (49), கருப்பசாமி (44), பாலகிருஷ்ணன் (47) ஆகிய நான்கு பேரும் பணம் வைத்து சூதாட்டம் விளையாடியதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து அந்த வழியே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த கந்தர்வகோட்டை காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 52 கார்டுகளையும் ரூ.200 பறிமுதல் செய்து பிணையில் விடுவித்தனர்.
News November 13, 2025
புதுக்கோட்டை: பட்டாவில் பெயர் மாற்ற புதிய வசதி!

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் eservices.tn.gov.in என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது<


