News November 12, 2025

BREAKING: முதல்முறையாக அரசு அறிவித்தது

image

டெல்லியில் நடந்தது பயங்கரவாத தாக்குதல் என மத்திய அரசு முதல்முறையாக அறிவித்துள்ளது. PM மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், செங்கோட்டை அருகே நடந்தது கோழைத்தனமான சம்பவம் என்றும், சதித்திட்டம் தீட்டியவர்களுக்கு நீதியின் முன்பு நிச்சயம் தண்டனை கிடைக்கும் என்றும் சூளுரைத்தார்.

Similar News

News November 13, 2025

இது ஐபோன் பாக்கெட்.. ₹26,000 மட்டுமே

image

ஐபோன்களை எளிதில் எடுத்துச் செல்வதற்காக ஆப்பிள் நிறுவனம் கலர் கலரான பைகளை அறிமுகம் செய்துள்ளது. fabric பயன்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ள அந்த பையில் ஐபோனை வைத்து கை, தோளில் மாட்டிக்கொள்ளலாம் என ஆப்பிள் நிறுவனம் கூறியுள்ளது. இதன் விலை இந்திய மதிப்பின்படி ₹26,000 மட்டுமே ஆகும். இது பார்ப்பதற்கு பாட்டி காலத்து சுருக்கு பை போல் இருப்பதாக நெட்டிசன்கள் கிண்டல் செய்கின்றனர்.

News November 13, 2025

விதவிதமாக நிறங்களில் கண்கள் – ஸ்வைப் பண்ணுங்க

image

உலகில் மனிதர்கள் பல விதம் என்பதுபோல, கண்களின் நிறங்களும் பல விதமான வண்ணங்களில் காணப்படுகின்றன. பெரும்பாலான மக்களுக்கு ஒரு குறிப்பிட்ட வண்ணத்திலும், அரிதாக சிலருக்கு மட்டுமே பிற வண்ணங்களில் உள்ளன. என்னென்ன வண்ணங்களில் கண்கள் உள்ளன, அவை எத்தனை சதவீத மக்களுக்கு உள்ளன என்பதை, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE

News November 13, 2025

₹397 கோடி ஊழல்.. திமுக அரசு மீது அறப்போர் புகார்

image

₹397 கோடி ஊழலின் முக்கிய புள்ளிக்கு தமிழக அரசு பதவி உயர்வு வழங்கியுள்ளதாக அறப்போர் இயக்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. தலைமை நிதி கட்டுப்பாட்டாளராக (CFC) பதவி உயர்வு பெற்றுள்ள காசி , டிரான்ஸ்பார்மர் கொள்முதலில் செந்தில் பாலாஜியுடன் சேர்ந்து செய்த செட்டிங் காரணமாக சந்தை விலையை விட 40% அதிகமாக டெண்டர் ஆணை வழங்கப்பட்டதாக புகாரளித்துள்ளது. இது திமுக ஊழல் மாடலின் மற்றொரு சாதனை என்றும் அறப்போர் சாடியுள்ளது.

error: Content is protected !!