News November 12, 2025

நாகை: தேர்தல் தேதி அறிவிப்பு – கலெக்டர்

image

இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் நாகை மாவட்ட கிளைத் தேர்தல் குறித்து நாகை மாவட்ட ஆட்சியர் பி.ஆகாஷ் வெளியிட்ட அறிக்கையில், நாகை மாவட்ட செஞ்சிலுவை சங்க நிர்வாகிகளுக்கான தேர்தல் வாக்குப் பதிவு வரும் நவம்பர் 24-ஆம் தேதி நாகப்பட்டினம் முதன்மை நிலையத்தில் நடைபெற உள்ளது. மேலும் தேர்தல் நடைமுறைகள் அனைத்தும் மாவட்ட நிர்வாகத்தின் மேற்பார்வையில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News November 12, 2025

நாகை: ரேஷன் கடையில் பிரச்சனையா?

image

நாகை மாவட்ட மக்களே உங்கள் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் பொருட்கள் சரியாக வழங்கப்படாமலும், தரமில்லாத பொருட்களை வழங்கினால், பணியாளர்கள் சரியான நேரத்திற்கு வராமல், பொதுமக்களிடம் முறையாக நடந்துகொள்ளாமல் இருப்பது போன்ற பிரச்சனைகள் நடந்தால் இனி கவலை வேண்டாம். உடனே 1967 (அ) 1800-425-5901 என்ற எண்ணை அழைத்து புகார் அளிக்கலாம். மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க!

News November 12, 2025

நாகை: ஆட்சியர் அலுவலகத்தில் புத்தாக்கப் பயிறசி

image

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில், புத்தாக்கப் பயிற்சி இன்று (12.11.2025) காலை 10 மணி அளவில் நடைபெற்று வருகிறது. இதில் அனைவரும் கலந்துகொண்டு பயன் பெறுமாறு மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளார். மேலும் மக்கள் தொடர்பு துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 12, 2025

நாகை: வாக்காளர் பெயர் சேர்க்க முக்கிய அறிவிப்பு

image

நாகை மக்களே, உங்கள் பகுதியில் SIR படிவம் வழங்கும் போது நீங்கள் வீட்டில் இல்லையா? இதனால் உங்கள் ஓட்டுரிமை பறிபோய்விடும் என்ற கவலை உள்ளதா? கவலை வேண்டாம்.<> இங்கே கிளிக்<<>> செய்து, FILL ENUMERATION FORM என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்து உங்கள் வாக்காளர் அடையாள அட்டை எண் அல்லது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிட்டு உங்களால் ஆன்லைன் மூலமாக வாக்காளர் பட்டியலில் பதிவு செய்து கொள்ள முடியும்! ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!