News November 12, 2025
குண்டுவெடிப்புக்கு மூளையாக விளங்கியவர் இவரா?

ஃபரீதாபாத்தில் டாக்டர்களை மூளைச்சலவை செய்து டெல்லி குண்டுவெடிப்பை நடத்தியதாக இமாம் இர்ஃபான் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஸ்ரீநகரில் அரசு ஹாஸ்பிடலில் பணிபுரிந்த இவர், பள்ளிவாசலுக்கு செல்வது வழக்கம். அங்கு வந்த மற்ற டாக்டர்களுடன் பழகி, அவர்களுக்கு ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் கொள்கைகளை கற்பித்து மூளை சலவை செய்திருக்கிறார். இவருடன் தொடர்பில் இருந்தவர்கள்தான் வெடிப்பை நிகழ்த்தியதாக கூறப்படுகிறது.
Similar News
News November 12, 2025
BREAKING: 3 திமுக அமைச்சர்கள் வீட்டில் பரபரப்பு

அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ், சேகர்பாபு மற்றும் பாடகி சின்மயி ஆகியோரின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. டெல்லி கார் வெடிப்பு சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கி இருக்கிறது. இந்த நிலையில், வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பதறிப்போன போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் & மோப்ப நாய்கள் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
News November 12, 2025
PAK குண்டுவெடிப்புக்கு யார் காரணம்? உண்மை இதோ!

இஸ்லாமாபாதில் நடந்த குண்டுவெடிப்புக்கு இந்தியா காரணம் என பாகிஸ்தான் குற்றம்சாட்டியது. ஆனால், தாக்குதலுக்கு பாகிஸ்தானி தாலிபான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. நீதிபதிகள், வழக்கறிஞர்களை குறிவைத்து இந்த தாக்குதலை நடத்தியதாகவும், இஸ்லாமிய சட்டம் அமல்படுத்தப்படும் வரை பல தாக்குதல்கள் நடக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த தாக்குதலில் குறைந்தது 12 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
News November 12, 2025
RCB ரசிகர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி!

கூட்ட நெரிசல் விவகாரம், RCB அணியை இக்கட்டான சூழலுக்கு தள்ளியுள்ளது. நடப்பு சாம்பியனாக 2026 தொடரில் களமிறங்கும், அந்த அணி ஒரு போட்டியை கூட பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் விளையாட வேண்டாம் என முடிவு செய்துள்ளதாம். அதற்கு பதிலாக புனே ஸ்டேடியத்தை, RCB அணி ஹோம் கிரவுண்டாக தேர்வு செய்துள்ளதாம். தொடர்ந்து அணிக்கு ஆதரவாக இருந்து வரும், RCB ரசிகர்களுக்கு இது பெரும் சோக செய்தியே.


