News November 12, 2025
புதுகை: சட்டவிரோத மது விற்பனை-ஒருவர் கைது!

புதுக்கோட்டை மாவட்டம் காரையூர் தியேட்டர் பேருந்து நிறுத்தம் அருகே, ராஜமாணிக்கம் (75) என்பவர் மதுபான பாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்துள்ளார். இதனை அடுத்து அந்த வழியே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காரையூர் காவல்துறையினர் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 26 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்து பிணையில் விடுவித்தனர்.
Similar News
News November 12, 2025
புதுகை: பயிர் காப்பீடு பதிவு செய்ய இதுவே கடைசி

புதுவை மாவட்ட விவசாயிகள் பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தில் சம்பா நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.36,000 கடன் தொகையில் 1.5% பிரிமியம் தொகை ரூ.534 காப்பீடு கட்டணமாக கட்டி பதிவு செய்து கொள்ளலாம். பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், வணிக வங்கி, மூலமாக பதிவு செய்து கொள்ளலாம். 15.11.25 தேதி கடைசி நாளாகும், இதனை பயன்படுத்திக் கொள்ள கலெக்டர் அருணா கேட்டுக் கொண்டுள்ளார்.
News November 12, 2025
புதுகை: புனித பயணம் செல்ல அரசு மானியம்!

புதுகை மாவட்ட கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் புனித பயணம் செல்ல ஒருவருக்கு ரூ.37,000, கன்னியாஸ்திரிகளுக்கு ரூ.60,000 ECS முறையில் நேரடி மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் 1.1.25க்கு பிறகு ஜெருசலம் பயணம் மேற்கொண்ட கிறிஸ்தவர் மத பயனாளிகள் விண்ணப்பங்களை www.bcmbcmw.tn gov.in இணையத்தில் பதிவிறக்கம் செய்து, அதனை பூர்த்தி செய்து 28.2.26க்குள் ஆணையர் சிறுபான்மை நலத்துறைக்கு அனுப்ப ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
News November 12, 2025
புதுகை: வாக்காளர் பெயர் சேர்க்க முக்கிய அறிவிப்பு

புதுகை மக்களே, உங்கள் பகுதியில் SIR படிவம் வழங்கும் போது நீங்கள் வீட்டில் இல்லையா? இதனால் உங்கள் ஓட்டுரிமை பறிபோய்விடும் என்ற கவலை உள்ளதா? கவலை வேண்டாம். இங்கே <


