News November 12, 2025
அரியலூர்: 15 ஆம் தேதியே இதற்கு கடைசி நாள்!

அரியலூர், இயற்கை சீற்றங்களால் நெல்லில் மகசூல் இழப்பு ஏற்படுவதை தடுக்கும் வகையில், பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் நெல் பயிருக்கு காப்பீடு செய்து கொள்ள அறிவிக்கப்பட்ட வருவாய் கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், வரும் 15-ம் தேதிக்குள் தேசியமயமாக்கப்பட்ட மற்றும் தொடக்கக் கூட்டுறவு வங்கிகளில் பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 12, 2025
அரியலூர்: VAO லஞ்சம் கேட்டால் இத செய்ங்க

பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது உள்ளிட்டவை கிராம நிர்வாக அலுவலரின் (விஏஓ) முக்கிய பணிகளாகும். இவற்றை முறையாக செய்யமால் விஏஓ யாரேனும் உங்களிடம் லஞ்சம் கேட்டால், அரியலூர் மாவட்ட மக்கள் 04329-228442 என்ற எண்ணில் தயங்காமல் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க!
News November 12, 2025
அரியலூர்: வாக்காளர் பெயர் சேர்க்க முக்கிய அறிவிப்பு

அரியலூர் மக்களே, உங்கள் பகுதியில் SIR படிவம் வழங்கும் போது நீங்கள் வீட்டில் இல்லையா? இதனால் உங்கள் ஓட்டுரிமை பறிபோய்விடும் என்ற கவலை உள்ளதா? கவலை வேண்டாம். இங்கே <
News November 12, 2025
அரியலூர்: கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000 நிதியுதவி

தமிழக அரசு சார்பில் கர்ப்பிணி பெண்களின் நலன் கருதி, ‘டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி’ எனும் அருமையான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் கர்ப்பிணிகளுக்கு 3 தவணைகளாக ரூ.14,000 நிதியுதவியும், ரூ.4,000 மதிப்புள்ள ஊட்டச்சத்து பெட்டகமும் வழங்கப்படுகிறது. திட்டத்தில் பயன்பெற விரும்பும் கர்ப்பிணிகள் இங்கே <


