News November 12, 2025
மதுரை: குழந்தைக்கு விஷம் கொடுத்த தந்தை தற்கொலை

மதுரை பாலமேடு தேவசேரி பாண்டி, நத்தம் ஜெயப்பிரியாவுடன் 4 ஆண்டுக்கு முன் திருமணமானது. மது போதையில் மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்வது வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு பாண்டி தனது 2 வயது பெண் குழந்தைக்கு பாலில் விஷம் கொடுத்தார், மதுரை அரசு மருத்துவமனையில் குழந்தை சிகிச்சையில் உள்ளது. நேற்று காலை தோட்டத்தில் பாண்டி தூக்கிட்டு தற்கொலை செய்தார். இதுக்குறித்து போலீசார் விசாரணை.
Similar News
News November 12, 2025
மதுரையில் லாரி மோதி சிறுவன் பலி

மதுரை சிந்தாமணி போஸ்ட் ஆபீஸ் தெருவை சேர்ந்த முருகன் இவரது மகன் சங்கர் பாண்டி அனுப்பானடி தனியார் பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மாலை சங்கர் பாண்டி சிந்தாமணி போலீஸ் சோதனை சாவடி பகுதியில் ரோட்டை கடக்க முயன்றார், அப்போது எதிரே வந்த லாரி மோதியதில் டயரில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுக்குறித்து போலீசார் விசாரணை.
News November 12, 2025
மதுரை: வாக்காளர் பெயர் சேர்க்க முக்கிய அறிவிப்பு!

மதுரை மக்களே, வாக்காளர் படிவத் திருத்தங்களுக்காக வீடு வீடாக SIR படிவம் உங்க பகுதில வழங்கும் போது நீங்க வீட்ல இல்லையா? உங்க ஓட்டு பறிபோயிடும்ன்னு கவலையா? அதற்கு ஒரு வழி இருக்கு. இங்<
News November 11, 2025
மதுரை கட்டட தொழிலாளி கல்லால் தாக்கி கொலை

நொண்டி கோவில்பட்டி கம்பர் தெரு மணிமாறன் 26. கட்டட தொழிலாளி. மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர். கட்டட தொழிலாளிகள் செக்கடி பகுதியில் இருந்து வேலைக்கு செல்வதால் மணிமாறனும் அதிகாலை 5:00 மணி அளவில் அப்பகுதி ஓட்டல் முன் நின்றிருந்தார்.அங்கு டூவீலரில் வந்தவர்கள் மணிமாறனை சிமென்ட் கல்லால் தாக்கி கொலை செய்து தப்பினர்.போலீசார் இருவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


