News November 12, 2025

தென்காசி கிணற்றில் கிடந்த பச்சிளம் குழந்தை

image

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே மகேந்திரவாடி கிராமத்தில் பிறந்து சில தினங்களே ஆன பச்சிளம் குழந்தை இன்று உயிரிழந்த நிலையில் கிணற்றில் மிதந்தது.
இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் அய்யாபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் விரைந்து வந்து குழந்தை உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News November 12, 2025

சங்கரன்கோவில் வழியாக செல்லும் சிறப்பு ரயில் அறிவிப்பு

image

வண்டி எண் (07111- 07112) நான்டேட் – கொல்லம் சிறப்பு ரயில் கீழ்க்கண்ட தேதிகளில் இயங்கும்: 20.11.2025 முதல் 15.01.26 ஒவ்வொரு வியாழன் தோறும் ஹைதராபாத்தில் இருந்து புறப்படும். 22.11.25 முதல் 17.01.26 வரை ஒவ்வொரு சனிக்கிழமை தோறும் கொல்லம் ஜங்ஷனில் இருந்து புறப்படும். வழித்தடம் : நான்டேட் , கச்சிகுடா , கடப்பா , திருப்பதி , வேலூர் , திருவண்ணாமலை, திருச்சி, மதுரை, சங்கரன்கோவில் வழியாக கொல்லம் செல்லும்.

News November 12, 2025

ஆலங்குளம்: குளத்தில் மூழ்கி முதியவர் உயிரிழப்பு!

image

ஆலங்குளம் அருகே சண்முகபுரம் மேற்கு தெருவை சேர்ந்த சங்கரலிங்கம் மகன் மணிமுத்து வயது 75 மனைவி, நான்கு மகன்கள் உள்ளனர். மணிமுத்துவை காணவில்லை என்று நேற்று முன்தினம் ஆலங்குளம் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து தேடிய நிலையில் நேற்று வீட்டிற்கு அருகே இருக்கும் குளத்தில் மணிமுத்து உடல் இறந்தநிலையில் மிதந்துள்ளது. உடலை மீட்டு போலீசார் விசாரணை.

News November 12, 2025

தென்காசி கோவிலில் நாளை தேரோட்டம்

image

தென்காசி காசி விசுவநாதர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண விழா (நவ.05) கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நாளை நவ.13 காலை 9 மணிக்கு நடைபெறுகிறது. நாளை மறுநாள் நவ.14 காலை யானை பாலம் தீர்த்தவாரி மண்டபத்தில் தபசுக்கு எழுந்தருளல், மாலையில் தபசு காட்சி நடக்கிறது. அன்று இரவு சுவாமி அம்பாள் திருக்கல்யாண திருவிழா நடைபெற உள்ளது.

error: Content is protected !!