News November 12, 2025
ஶ்ரீரங்கம்: லட்சக்கணக்கில் பக்தர்கள் காணிக்கை

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் மாதாந்திர உண்டியல்கள் திறக்கப்பட்டு, காணிக்கை என்னும் பணி நேற்று (நவ.11) காலை தொடங்கி நடைபெற்று வந்தது. இதில் 78 லட்சத்து 2 ஆயிரத்து 585 ரூபாய் ரொக்கப்பணம், 58 கிராம் தங்கம், 994 கிராம் வெள்ளி மற்றும் 301 வெளிநாட்டு ரூபாய் நோட்டுகள் கிடைக்கப்பெற்றதாக கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 12, 2025
திருச்சி: வாக்காளர் பெயர் சேர்க்க முக்கிய அறிவிப்பு

திருச்சி மக்களே, உங்கள் பகுதியில் SIR படிவம் வழங்கும் போது நீங்கள் வீட்டில் இல்லையா? இதனால் உங்கள் ஓட்டுரிமை பறிபோய்விடும் என்ற கவலை உள்ளதா? கவலை வேண்டாம்.<
News November 12, 2025
திருச்சி: கொத்தனார் மர்ம சாவு

கரூா் சா்ச் காா்னா் நீலிமேட்டுத் தெருவைச் சோ்ந்தவா் பி.ராமசாமி (43). திருச்சியில் கொத்தனாராக வேலை செய்து வந்தாா். இந்நிலையில், இவா் குழுமணி பகுதியில் காலனியில் மா்மமான முறையில் இறந்துகிடப்பதாக உறையூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், ராமசாமியின் சடலத்தைக் கைப்பற்றி அவர் கொலை செய்யப்பட்டாரா? உட்பட பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 12, 2025
திருச்சி: 100 பேர் அதிரடி கைது!

திருச்சியில் கஞ்சா விற்ற வழக்கில் ராம்ஜி நகர் ஹரிபாஸ்கர் காலனியை சேர்ந்த செல்வி (58), மலைப்பட்டியை சேர்ந்த ரேவதி (60) ஆகியோரை திருவெறும்பூர் மதுவிலக்கு காவல் துறையினர் கைது செய்தனர். இவர்களது தொடர் குற்ற செயலை தடுக்கும் பொருட்டு, எஸ்.பி பரிந்துரையின் பேரில் 2 பேர் மீதும் குண்டர் சட்டம் பதியப்பட்டது. இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் கடந்த 10 மாதங்களில் 100 பேர் குண்டாசில் கைது செய்யபட்டுள்ளனர்.


