News November 12, 2025
சாக்கடையில் வீசப்பட்ட குழந்தை: கோவையில் கொடூரம்!

சூலூர் அருகே பள்ளபாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில், பிறந்து சில மணி நேரங்களை ஆன குழந்தையை மர்ம நபர்கள் சாக்கடையில் வீசிச் சென்றனர். உயிருடன் இருந்த குழந்தையை அப்பகுதியினர் பார்த்து 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குழந்தையை வீசி சென்ற மர்ம நபர்கள் குறித்து சூலூர் போலீசார் விசாரணை செய்கின்றனர். மனசாட்சி இல்லாத இந்த செயலை அப்பகுதியினர் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
Similar News
News November 12, 2025
கோவை: 10th போதும் ரூ.56,000 சம்பளத்தில் அரசு வேலை!

கோவை மக்களே, மத்திய அரசின் சுங்க வரித்துறையில் காலியாக உள்ள 22 உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இதற்கு 10th தகுதி போதுமானது. மாதம் ரூ.18,000 முதல் ரூ.56,900 வரை சம்பளம் வழங்கப்படும். இது குறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <
News November 12, 2025
கோவை சாலைகளில் லாரி விபத்துகளில் 32 பேர் உயிரிழப்பு

கோவை நகரில் ஜனவரி முதல் அக்டோபர் வரை லாரிகள் சம்பந்தப்பட்ட விபத்துகளில் 32 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஆண்டை விட இது அதிகம். பீக் ஹவரில் லாரி நுழைவுத் தடையும், மணிக்கு 30 கி.மீ வேக வரம்பும் அமலில் இருந்தாலும், மீறல்கள் அதிகரித்து வருகின்றன. இதை கட்டுப்படுத்த போலீசார் கடுமையான நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
News November 12, 2025
மேட்டுப்பாளையம் அருகே விபத்து: சம்பவ இடத்திலேயே பலி!

மேட்டுப்பாளையம் அடுத்த வேடர் காலனி பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி ராஜ மனோகரன். இவர் நேற்றிரவு சிறுமுகையில் இருந்து பணி முடித்து விட்டு பாலப்பட்டி வழியாக டூவீலரில் வீடு திரும்பியுள்ளார். அப்போது, பாலப்பட்டியில் இருந்து சிறுமுகை நோக்கி சென்ற பிக்கப் வாகனத்தின் மீது டூவீலர் எதிர்பாராத விதமாக மோதியதில், ராஜ மனோகரன் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.


