News November 12, 2025
ரஜினியை தொடர்ந்து கமலை இயக்குகிறாரா சுந்தர் சி?

‘அருணாச்சலம்’ படத்திற்கு பின்னர் மீண்டும் ரஜினி படத்தை இயக்குவேன் என எதிர்பார்க்கவே இல்லை என சுந்தர் சி தெரிவித்துள்ளார். இதுபோன்று மீண்டும் கமல்ஹாசனை இயக்குவதற்கான வாய்ப்பு அமையலாம் எனவும், அப்படி ஒரு வாய்ப்பு அமைந்தால், அந்த படத்தையும் மிகச்சிறப்பாக இயக்குவேன் என்றும் அவர் கூறியுள்ளார். முன்னதாக, கமல் நடிப்பில் ‘அன்பே சிவம்’ படத்தை சுந்தர் சி இயக்கி இருந்தார்.
Similar News
News November 12, 2025
டிகிரி மட்டும் போதும்; வங்கியில் வேலை.!

பேங்க் ஆப் பரோடாவில் Apprentice பணிக்கு 153 காலிப்பணியிடங்கள் உள்ளன. தகுதி: ஏதாவது ஒரு டிகிரி. வயது வரம்பு: 20-28 வயது வரை. ஊதியம்: மாதம் ₹15,000 வரை Stipend. தேர்வு முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, உள்ளூர் மொழி தேர்வு. விண்ணப்ப கடைசி நாள்: 1 பிப்ரவரி 2026. விண்ணப்பிக்கும் முறை: Bank of Baroda அதிகாரப்பூர்வ வலைத்தளம் வழியாக மட்டுமே. வேலை தேடுவோருக்கு SHARE THIS.
News November 12, 2025
தவெகவில் இருந்து தாவும் நிர்வாகிகள்

கட்சி ஆரம்பித்த புதிதில் நாதகவின் தம்பிகளை நாசுக்காக தன் வசம் இழுத்தது தவெக. ஆனால் கரூர் சம்பவத்துக்கு பிறகு களமே தலைகீழாக மாறியிருப்பதாக கூறப்படுகிறது. அதிருப்தியில் இருக்கும் தவெகவினரை வலைவீசித் தேடி நாதகவுக்கு கூட்டிவரும் ஸ்பெஷல் அசைன்மெண்ட்டில் தம்பிகள் இறங்கியிருக்கிறார்களாம். இதனால்தான் ராணிப்பேட்டை வழக்கறிஞர் அணி இணை ஒருங்கிணைப்பாளரான அஜய், ஆதரவாளர்களோடு நாதகவுக்கு ஜம்ப் ஆனார் என்கின்றனர்.
News November 12, 2025
தமிழ் நடிகர் மரணம்.. நடிகை கண்ணீருடன் இரங்கல்

மறைந்த நடிகர் அபிநய் குறித்து நடிகை விஜி உருக்கமான பதிவை வெளியிட்டு இரங்கல் தெரிவித்துள்ளார். ‘சென்னை 28’ படத்துக்கு பிறகு ஒரு பெரிய விளம்பரப் படத்தில் அபிநய் உடன் நடித்தேன். அப்போது ஒருநாள் அவரின் மனதில் இருந்த வலியை கொட்டித் தீர்த்தார். தற்போது அவர் காலமானார் என்ற செய்தியை கேட்டதும் அழுதேன். அவரின் போராட்டம் முடிவுக்கு வந்துவிட்டது. ஒருவழியாக அமைதியை அடைந்துவிட்டார் என்று பதிவிட்டுள்ளார்.


