News November 12, 2025
உலகக்கோப்பைக்கு பிறகு என் உலகமே மாறியது: தீப்தி

மகளிர் ODI WC-க்கு பிறகு தனது வாழ்க்கையே மாறிவிட்டதாக இந்திய வீராங்கனை தீப்தி சர்மா தெரிவித்துள்ளார். முன்பு பொது இடங்களில் சென்றால், யாருக்கும் தன்னை தெரியாது. ஆனால், இப்போது மாஸ்க் அணிந்து சென்றாலும், கண்டுபிடித்து தன்னை பாராட்டுகின்றனர். கனவில் இருப்பது போல் உள்ளது என அவர் தெரிவித்துள்ளார். ODI WC-ல் 215 ரன்கள் + 22 விக்கெட்களை எடுத்து, தீப்தி தொடர் நாயகி விருது வென்றது குறிப்பிடத்தக்கது.
Similar News
News November 12, 2025
தங்கம் விலை தடாலடியாக மாறியது

சர்வதேச சந்தையில் தங்கம் விலை கடும் சரிவை சந்தித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 1 அவுன்ஸ்(28g) தங்கம் $23.64 உயர்ந்து $4,137-க்கு விற்பனையாகி வருகிறது. இது இந்திய சந்தையிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2 நாள்களாக இந்தியாவில் தங்கத்தின் விலை ஏற்றத்தை கண்டுள்ளது. நேற்று (நவ.11) ஒரே நாளில் சவரனுக்கு ₹1,760 அதிகரித்து, ₹93,600 -க்கு விற்பனையானது. SHARE.
News November 12, 2025
கூண்டோடு கட்சியில் இணைந்தனர்

கடந்த செப்டம்பரில் ‘நமது மக்கள் முன்னேற்ற கழகம்’ (NMMK) என்ற புதிய கட்சியை தொடங்கி மாநிலம் முழுவதும் பி.எல்.ஏ.ஜெகநாத் மிஸ்ரா பரப்புரை மேற்கொண்டு வருகிறார். நேற்று மாலை சேலத்தில் நடந்த நிகழ்ச்சியில், 1000-க்கும் மேற்பட்ட மாற்றுக்கட்சியினர் NMMK-வில் தங்களை இணைத்துக் கொண்டனர். இதன்பின் பி.எல்.ஏ.ஜெகநாத் பேசுகையில், ஒத்த கருத்துடைய கட்சியுடன் இணைந்து 2026 தேர்தலை சந்திப்போம் என தெரிவித்தார்.
News November 12, 2025
படிப்பில் பிள்ளைகள் கெட்டிக்காரராக விளங்க..

புத்தி காரகன் புதன் பகவான் ஆவார். புதன் என்றால் பச்சை. புதன் கிழமையில், அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்கு சென்று, துளசியை பெருமாளுக்கு சாத்த வேண்டும். தொடர்ந்து, நவகிரக சன்னதியில் உள்ள, புதன் பகவானுக்கு இரண்டு விளக்கேற்றி வழிபாடு செய்ய வேண்டும். இவ்வழிபாட்டினை தொடர்ந்து செய்வதால், பிள்ளைகள் நிச்சயம் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள்.


