News November 2, 2025
நாகையில் 96,865 டன் நெல் கொள்முதல் – ஆட்சியர் தகவல்

நாகை மாவட்டத்தில் இந்த ஆண்டு குறுவை பருவ நெல் கொள்முதல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதுவரை மொத்தம் 96,865 டன் நெல் அரசு மையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மொத்தம் 123 நேரடி நெல் கொள்முதல் மையங்களில் இதுவரை 82,478 மெட்ரிக் டன் நெல் விவசாயிகளிடமிருந்து வாங்கப்பட்டுள்ளது. மேலும் 14,387 டன் நெல் விற்பனைக்காக பதிவு செய்யப்பட்டுள்ளது.
Similar News
News November 2, 2025
நாகை: 1,00,162 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்

நாகப்பட்டினம், 117 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கே.எம்.எஸ் 2025-2026 ஆம் ஆண்டு குறுவை பருவத்தில் (03.09.2025) முதல் (01.11.2025) வரை 1,00,162 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதில் நேற்றைய தினம் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 3,297 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. மாவட்ட முழுவதும் கொள்முதல் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
News November 2, 2025
நாகை: பள்ளிகளுக்கு உள்ளுர் விடுமுறை

நாகப்பட்டினம் மெய்கண்ட மூர்த்தி சுவாமி திருக்கோயிலின் மகா கும்பாபிசேகம் நாளை 3ஆம் தேதி நடக்கிறது. இதையடுத்து நாகப்பட்டினம் மற்றும் திருமருகல் ஒன்றியங்களை சேர்ந்த அனைத்து பள்ளிகளுக்கும், நாளை உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் வரும் 8ஆம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
News November 2, 2025
நாகை: மானியத்துடன் மின்மோட்டார் வேண்டுமா?

நாகை மக்களே, விவசாயிகளுக்கு 50% மானியத்துடன் கூடிய மின்மோட்டார் மற்றும் பம்புசெட்டுகள் பெறுவதற்கு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. புதிதாக வாங்கப்படும் மின் மோட்டார்களின் மொத்த விலையில் ரூ.15,000/-அல்லது 50% மானியமாக வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க <


