News November 1, 2025
ஆந்திரா கோயில் கூட்டநெரிசல்: மாறிமாறி குற்றச்சாட்டு

ஆந்திரா <<18168110>>கோயில் கூட்டநெரிசலுக்கு<<>> காரணமான ஏகாதசி நிகழ்ச்சி குறித்து, கோயில் நிர்வாகம் போலீஸ், உள்ளூர் அதிகாரிகளிடம் கூறவில்லை என அம்மாநில CM சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். கோயில் நிர்வாகம் தகவல் தெரிவித்து இருந்தால், கூட்டத்தை கட்டுப்படுத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். ஆனால், இது நிர்வாக திறமையின்மையை காட்டுவதாக அம்மாநில EX CM ஜெகன் மோகன் சாடியுள்ளார்.
Similar News
News November 2, 2025
ஆந்திரா கூட்டநெரிசல்: கோயில் நிர்வாகம் சொல்வது என்ன?

<<18173836>>ஆந்திர கோயில் கூட்டநெரிசல் <<>>விவகாரத்தில், கோயில் நிர்வாகம் அரசுக்கு தகவல் தெரிவித்து இருந்தால், உயிரிழப்புகளை தடுத்திருக்கலாம் என அம்மாநில CM சந்திரபாபு நாயுடு தெரிவித்து இருந்தார். ஆனால், சொந்த நிலத்தில் கோயில் கட்டிய நான் ஏன் அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என அக்கோயிலை கட்டிய ஹரி முகுந்தா பாண்டா கூறியுள்ளார். மேலும், எத்தனை வழக்குகளை போட்டாலும் தனக்கு கவலை இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
News November 2, 2025
2025 WCC-ல் சதம் விளாசிய வீராங்கனைகள்

2025 ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில், இன்று இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. இந்த தொடரில் அடிக்கப்பட்ட ஒவ்வொரு சதமும் அணியின் வெற்றிக்கு வழிவகுத்தது மட்டுமல்ல, பெண்கள் கிரிக்கெட்டின் தரத்தையும் உயர்த்தி உள்ளது. சதம் அடித்த வீராங்கனைகள் யார் என்று, மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. கமெண்ட் பண்ணுங்க.
News November 2, 2025
பள்ளி மாணவர்களுக்கு மகிழ்ச்சியான நியூஸ்

நாடு முழுவதுமுள்ள அனைத்து CBSE பள்ளிகளுக்கான கல்வி செயல்திறன் அட்டை(ரிப்போர்ட் கார்டு) வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, 10, +2 மாணவர்களின் கல்வி திறன் விவரங்கள் பாடவாரியாக ரிப்போர்ட் கார்டில் இடம்பெற்றிருக்கும். இதன்மூலம், மாணவர்கள் எந்தெந்த பாடத்தில் குறைவான மார்க் பெற்றுள்ளனர் என அறிந்து கூடுதல் கவனம் செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இதனால், மாணவர்களின் கற்றல் திறன் மேம்படும். SHARE IT.


