News November 1, 2025

திண்டுக்கல்: சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர் இன்று (நவம்பர் 1) சமூக ஊடகங்கள் வழியாக பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர். சிக்னல் விதிகளை கடைபிடித்தல், ஜீப்ரா கிராசிங் பயன்படுத்தல், சாலையை கடக்கும் போது இருபுறமும் பார்வையிடுதல், ஓடாமல் பாதுகாப்பாக நடப்பது உள்ளிட்ட முக்கிய வழிமுறைகளை மக்களுக்கு எடுத்துரைத்தனர்.

Similar News

News November 2, 2025

திண்டுக்கல்: WhatsApp-ல் வரும் ஆபத்து.. உஷார்!

image

தமிழகத்தில் 2 வகை சைபா் மோசடிகள் அதிகம் நடைபெறுவது கண்டறியப்பட்டுள்ளது. முக்கியமாக, போக்குவரத்து விதிமுறை மீறியதாக போலி இ-செலான்களை What’s App வாயிலாக அனுப்பி மோசடி நடைபெறுகிறது. இ-செலான்களை வாட்ஸ்ஆப் மூலமாக அரசின் எந்த துறையும் அனுப்புவது கிடையாது. மோசடி கும்பல் வாட்ஸ்ஆப் மூலம் போலி இ-செலான்களை அனுப்பி மோசடி செய்கிறது. எனவே, உஷாராக இருக்க சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

News November 2, 2025

திண்டுக்கல்லில் பெண் வெட்டிக் கொலை.. இருவர் கைது

image

திண்டுக்கல் அருகே கடந்த அக்டோபர் 27 ஆம் தேதி பெண் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் தொடர்புடையதாக கருதப்படும் நந்தவனப்பட்டியை சேர்ந்த கலைமணி மற்றும் வினோத்குமார் ஆகிய 2 பேரை தாடிக்கொம்பு போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும், கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கார் மற்றும் பைக் உள்ளிட்ட வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

News November 2, 2025

திண்டுக்கல்: இன்றைய இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை அதிகாரியின் ரோந்து விவரம் நேற்று (நவம்பர் 1) சனிக்கிழமை இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை திண்டுக்கல் சுற்றுவட்டார பகுதியான திண்டுக்கல் ஊடகம், திண்டுக்கல் நகர், நிலக்கோட்டை, ஒட்டன்சத்திரம், பழனி, கொடைக்கானல், வேடசந்தூர் ஆகிய பகுதிகளில் ஏதேனும் புகார் இருந்தால் மேலே கொடுக்கப்பட்டுள்ள காவல்துறை அதிகாரியின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.

error: Content is protected !!