News November 1, 2025
புதுச்சேரி: நூல் வெளியீட்டு விழா

புதுச்சேரி, ஓய்வு பெற்ற தமிழ் விரிவுரையாளர் லோகநாதன் எழுதிய நுால்களான நாட்டுபுற மக்களின் நம்பிக்கைகளும், சடங்குகளும்’ என்ற ஆய்வு நுால் மற்றும் ‘குல்லா போட்ட கத்திரிக்காய்’ என்ற குழந்தை பாடல்கள் ஆகிய இரண்டு நூல்களின் வெளியீட்டு விழா, புதுச்சேரி சட்டப்பேரவையில் நடந்தது. முதல்வர் ரங்கசாமி நூல்களை வெளியிட்டார். அதனை சபாநாயகர் செல்வம் பெற்றுக்கொண்டார்.
Similar News
News November 2, 2025
புதுவை: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

புதுவை மக்களே இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை (9013151515) சேமிக்க வேண்டும். இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக Hi என்று ஆங்கிலத்தில் Message அனுப்பினால் போதும். அதுவே வழிகாட்டும். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணி தெரியப்படுத்துங்க.
News November 2, 2025
புதுச்சேரி வரலாற்று புகைப்பட கண்காட்சி

புதுவை யூனியன் பிரதேச வரலாற்றை விளக்கும் வகையில் சுற்றுலாத் துறை சார்பில் 2 நாள் புகைப்பட கண்காட்சி நேற்று தொடங்கியது. கடற்கரை சாலையில் உள்ள மேரி கட்டடத்தில் இக்கண்காட்சியை முதல்வர் ரங்கசாமி தொடங்கி வைத்து பார்வையிட்டார். மேலும், மாணவர்கள் சுற்றுலாப் பயணிகள் பார்வையிட்டனர்.சபாநாயகர் செல்வம் துணை சபாநாயகர் ராஜவேல் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
News November 2, 2025
புதுவை: சுற்றுலா வந்தவருக்கு நேர்ந்த சோகம்!

மராட்டிய மாநிலம் மும்பையைச் சேர்ந்தவர் சராயு பாண்டூரங் ஹாண்டே. இவர் தனது உறவினர்கள் 20 பேருடன் புதுவைக்கு அக்.31 அன்று சுற்றுலா வந்துள்ளார். புதுவையில் பல்வேறு இடங்களை சுற்றி பார்த்துவிட்டு மறைமலையடிகள் சாலையில் உள்ள தங்கும் விடுதியில் தங்கி இருந்தபோது ஹண்டேவிற்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மயங்கி விழுந்து இறந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து உருளையன்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.


