News November 1, 2025
BREAKING: லெஜெண்ட் விடை பெற்றார்

இந்தியாவின் நட்சத்திர டென்னிஸ் வீரர் ரோஹன் போபண்ணா, சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 20 ஆண்டுகளாக இந்திய அணிக்காக விளையாடி வரும் போபண்ணா, கலப்பு இரட்டையர் பிரிவில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். அவரது பங்களிப்பை கவுரவிக்கும் விதமாக மத்திய அரசு 2019-ம் ஆண்டு அர்ஜுனா விருதையும், 2024-ல் பத்மஸ்ரீ விருதையும் வழங்கியது.
Similar News
News November 2, 2025
340 பணியிடங்கள்; ₹40,000 முதல் சம்பளம்!

மத்திய அரசின் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் 340 பணியிடங்கள் உள்ளன. புரொபேஷனரி பொறியாளர் பதவிக்கு எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், கம்யூனிகேஷன், டெலி கம்யூனிகேஷன், மெக்கானிக்கல், கணினி அறிவியல் சார்ந்த பாடப்பிரிவுகளில் B.E / B.Tech / B.Sc படித்திருக்க வேண்டும். இதற்காக ₹40,000 முதல் – ₹1.40 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும். நவ.14-க்குள் <
News November 2, 2025
வங்கிக் கணக்கில் ₹2,000.. வந்தது புதிய அப்டேட்!

நீண்ட காலமாக PM கிசான் யோஜனா திட்டத்தின் 21-வது தவணைக்காக விவசாயிகள் காத்திருக்கின்றனர். நவம்பர் முதல் வாரத்தில் விவசாயிகளுக்கு ₹2,000 வழங்கப்படும் என சமீபத்தில் செய்தி வெளியானது. இந்நிலையில், பிஹாரில் முதல்கட்ட தேர்தல் 6-ம் தேதி நடக்கவிருப்பதால், அதற்கு முன்னதாகவே நாளை அல்லது நாளை மறுநாள் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ₹2,000 வரவு வைக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
News November 2, 2025
அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடங்கியது

CM ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடங்கியுள்ளது. நவம்பர் 4-ம் தேதி முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் (SIR) தொடங்கவிருக்கிறது. இதற்கு எதிராக நடவடிக்கை எடுப்பது குறித்து, இந்த ஆலோசனை கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படுகிறது. இக்கூட்டத்தில் திமுக கூட்டணி கட்சிகள், தேமுதிக உள்ளிட்டவை பங்கேற்ற நிலையில், தவெக, நாதக உள்ளிட்ட 21 கட்சிகள் பங்கேற்கவில்லை.


