News November 1, 2025
வாக்காளர் பட்டியல் திருத்தல் அதிகாரிகள் நியமனம்

குமரி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் திருத்துவதற்காக தொகுதி வாரியாக அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கன்னியாகுமரி – மாவட்ட வழங்கல் அலுவலர் புஷ்பா தேவி, நாகர்கோவில் – ஆர்டிஓ காளீஸ்வரி, குளச்சல் – ஆதி திராவிடர் நல அலுவலர் மோகனா, பத்மநாபபுரம் -சப் கலெக்டர் வினை குமார் மீனா, விளவங்கோடு – பிற்படுத்தப்பட்ட நல அலுவலர் செந்தூரான், கிள்ளியூர் – ஆயம் உதவி ஆணையர் ஈஸ்வர நாதன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
Similar News
News November 2, 2025
குமரி: பக்தர்கள் கவனத்திற்கு!

நவம்பர் 16 முதல் கார்த்திகை மாதம் தொடங்குகிறது. சபரிமலையில் சுவாமி தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவு (Virtual Q) கட்டாயம் ஆக்கபட்டுள்ளது. தரிசன முன்பதிவுகள் தற்போது தொடங்கியுள்ளது. சிரமமின்றி தரிசனம் செய்ய இங்கு <
News November 2, 2025
குமரி: தனியார் பாரில் அதிரடி சோதனை

நித்திரவிளை போலீசாருக்கு நேற்று கல்லு விளையில் உள்ள பார் ஒன்றில் மது விற்பதாக கிடைத்த தகவலின் பெயரில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு விற்பனைக்காக 44 மது பாட்டில்கள் இருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார் இது தொடர்பாக முத்துக்குமார், சிமியோன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
News November 2, 2025
குமரி: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

1.முதலில் http://cmcell.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்
2. பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்பதை க்ளிக் செய்து, உங்களுக்கான ID-ஐ உருவாக்க வேண்டும்.
3. இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4. பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க


