News November 1, 2025

தேனி: அஜாக்கிரதையால் நேர்ந்த விபரீதம்

image

குள்ளபுரம் பகுதியை சேர்ந்தவர் வெற்றிவேந்தன். இவர் நேற்று முன்தினம் அவரது பைக்கில் அப்பகுதியில் உள்ள சாலையில் சென்றுள்ளார். அப்பொழுது அப்பகுதியில் விபத்து ஏற்படுத்தும் விதமாக அஜாக்கிரதையாக நிறுத்தப்பட்டு இருந்த பால் வண்டி மீது வெற்றிவேந்தன் சென்ற பைக் மோதியது. இந்த விபத்தில் அவர் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்து குறித்து ஜெயமங்கலம் போலீசார் வழக்கு (அக்.31) பதிவு.

Similar News

News November 2, 2025

தேனி: அனைத்து சேவைகளுக்கும் இந்த ஒரு லிங்க் போதும்.!

image

தேனி மக்களே.. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, வரி செலுத்திய விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். இந்த லிங்கை <>கிளிக் செய்து<<>> அனைத்து சேவையையும் இதிலே பெறலாம். மேலும், இந்த சேவையைப் பெற உதவி தேவைப்பட்டால் 9884924299 என்ற உதவி எண்ணை அழைக்கலாம். இது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். Share பண்ணுங்க.

News November 2, 2025

தேனி: ஊராட்சியில் வேலை.. APPLY செய்வது எப்படி?

image

தேனி மாவட்டத்தில் 20 கிராம ஊராட்சி செயலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 10th படித்த 18 வயது நிரம்பியவர்கள் முதலில் <>இங்கு க்ளிக் <<>>செய்து மதுரைக்கான விண்ணப்பத்தை படிக்கவும். பின்னர் கிழே APPLY தேர்வை கிளிக் செய்ய வேண்டும். அதில், உங்கள் சுய விவரங்கள், சான்றிதழை பதிவேற்றம் செய்ய வேண்டும். கடைசி நாள்: நவ. 9; சம்பளம்: ரூ.15,900 – ரூ.50,400. இந்த நல்ல வாய்ப்பை எல்லோருக்கும் SHARE பன்னுங்க.

News November 2, 2025

தேனி: தலைமறைவான குற்றவாளிக்கு 10 ஆண்டு சிறை

image

தேனி மாவட்டத்தை சேர்ந்த 14 வயது சிறுமியை 2017-ல் சிறுமியின் உறவினரான சிவராஜ் (41) என்பவர் திருமணம் செய்வதாக கூறி பலாத்காரம் செய்துள்ளார். போலீசார் அவரை கைது செய்த நிலையில், அவர் ஜாமீனில் வெளிவந்து தலைமறைவானார். அவரை கடந்த ஏப்ரலில் பிரகடனப்படுத்தப்பட்ட குற்றவாளியாக தேனி போக்சோ நீதிமன்றம் அறிவித்தது. இந்நிலையில் நேற்று (நவ. 1) சிவராஜூக்கு 10 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

error: Content is protected !!