News November 1, 2025
மயிலாடுதுறை மக்களே உங்களுக்கு தெரியுமா?

யிலாடுதுறை மாவட்டம் பல வரலாறுகளை கொண்டுள்ளது. இந்நிலையில் மாவட்டத்தின் முக்கிய ஊர்கள் முற்காலத்தில் எவ்வாறு அழைக்கப்பட்டது என்பதை காண்போம். மயிலாடுதுறை – மாயவரம், செம்பனார்கோவில் – இந்திரபுரி, பூம்புகார் – காவிரிப்பூம்பட்டினம், சீர்காழி – பிரம்மபுரம், குத்தாலம் – திருத்துருத்தி, மணல்மேடு – நாகநாதபுரம், தரங்கம்பாடி – ட்ரான்கேபார் என அழைக்கப்பட்டது. உங்களுக்கு தெரிந்த பெயர்களை கமெண்ட் பண்ணுங்க.
Similar News
News November 2, 2025
நெடுஞ்சாலையை பார்வையிட்ட கலெக்டர்

நெடுஞ்சாலை துறை சார்பில் மயிலாடுதுறை திருவாரூர் சாலை இரு வழி சாலையாக தரம் உயர்த்தப்பட்டுள்ளதை தமிழக முதல்வர் நேற்று காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சி குத்தாலம் வட்டம் கழனிவாசல் சோதனை சாவடி பகுதியில் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த், திருவாரூர் ஆட்சியர் மோகனசந்திரன், எம்எல்ஏக்கள் நிவேதா முருகன் ராஜ்குமார் ஆகியோர் கலந்துகொண்டு குத்து விளக்கு ஏற்றி வைத்து பார்வையிட்டனர்
News November 2, 2025
மயிலாடுதுறை: மானியத்துடன் மின்மோட்டார் வேண்டுமா?

விவசாயிகளுக்கு 50% மானியத்துடன் கூடிய மின்மோட்டார் மற்றும் பம்புசெட்டுகள் பெறுவதற்கு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. புதிதாக வாங்கப்படும் மின் மோட்டார்களின் மொத்த விலையில் ரூ.15,000/-அல்லது 50% மானியமாக வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க இங்கே <
News November 2, 2025
மயிலாடுதுறை: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

மயிலாடுதுறை மக்களே இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை (9013151515) சேமிக்க வேண்டும். இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக Hi என்று ஆங்கிலத்தில் Message அனுப்பினால் போதும். அதுவே வழிகாட்டும். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணி தெரியப்படுத்துங்க…


