News November 1, 2025

தி.மலை: தேர்வு இல்லாமல் வங்கி வேலை!

image

தி.மலை மக்களே, தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 12-வது தேர்ச்சி பெற்ற 18-33 வயதுகுட்பட்டவர்கள் <>இங்கு கிளிக்<<>> செய்து நவ 15.க்குள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.20,000 – ரூ.30,000 வரை வழங்கப்படும். இதற்கு தேர்வு கிடையாது. நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பவார்கள். இத்தகவலை SHARE பண்ணுங்க.

Similar News

News November 2, 2025

திருவண்ணாமலை: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று (நவ.1) இரவு 10 மணி முதல் இன்று (நவ.2) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News November 1, 2025

திருவண்ணாமலை: வீடுகளின் மீது அடுத்தடுத்து கற்கள் வீச்சு!

image

செய்யாரில் டாக்டர் அம்பேத்கர் நகரில் உள்ள மாரியம்மன் கோவில், தெருவில் நேற்று இரவு சுமார் 9:30 மணி அளவில் 8 வீடுகள் மீது அடுத்தடுத்து கற்கள் வீசப்பட்டன. இதனால் அப்பகுதி மக்கள் பீதியடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த செய்யாறு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்திக் கொண்டிருந்த போதும் கற்கள் தொடர்ந்து விழுந்தன. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் பரபரப்பு நிலவியது.

News November 1, 2025

நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் – எம்.பி. பங்கேற்பு

image

திருவண்ணாமலை மாவட்டம் தேவிகாபுரம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் இன்று (நவ.01) “நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்” சிறப்பாக நடைபெற்றது. இந்த முகாமில் திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் திரு. தரணிவேந்தன் அவர்கள் கலந்து கொண்டார். அவர், பொதுமக்களுடன் கலந்துரையாடி, நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பல்வேறு அரசு துறைகள் இணைந்து சுகாதார பரிசோதனை நடைபெற்றது.

error: Content is protected !!