News November 1, 2025

17 துணை வட்டாட்சியர்கள் அதிரடி பணியிடை மாற்றம்

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 17 துணை வட்டாட்சியர்களை அதிரடியாக பணியிடை மற்றும் செய்து மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் அக்டோபர் 31-ம் தேதி உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி திருக்கோவிலூர் தலைமையிடத்து துணை வட்டாட்சியராக கங்காலட்சுமி என்பவரும், வாணாபுரம் தேர்தல் துணை வட்டாட்சியராக சதீஷ்குமார் என 17 துணை வட்டாட்சியர்கள் பணியிடை மற்றும் செய்யப்பட்டுள்ளனர்.

Similar News

News November 2, 2025

கள்ளக்குறிச்சி: தேர்வு இல்லாமல் வங்கி வேலை

image

கள்ளக்குறிச்சி மக்களே, நபார்டு வங்கியில் (NABARD) பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 12-வது தேர்ச்சி பெற்ற 18-33 வயதுகுட்பட்டவர்கள் நவ.15-க்குள் விண்ணப்பிக்கலாம். இதில் ஊதியமாக மாதம் ரூ.20,000 – ரூ.30,000 வரை வழங்கப்படும். இதற்கு தேர்வு கிடையாது. நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். விருப்பமுள்ளவர்கள் nabfins.org/Careers எனும் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்லாம்.

News November 2, 2025

உளுந்தூர்பேட்டை டிஎஸ்பி அதிரடி!

image

உளுந்தூர்பேட்டை டிஎஸ்பி அசோகன் திருச்சி தேசிய நெடுஞ்சாலை ரோந்து பணியில் ஈடுபட்ட போது எறஞ்சி என்ற இடத்தில் அந்த வழியாக வந்த ஒரு டிப்பர் லாரியை மடக்கி சோதனை செய்ததில் அரசு அனுமதியின்றி கூழாங்கற்கள் ஏற்றிச் சென்றது தெரியவந்தது. இதனையடுத்து அந்த லாரியை பறிமுதல் செய்து லாரி ஒட்டுனர் விருதாச்சலம் அடுத்த புதுப்பேட்டையை சேர்ந்த அஜித்குமார் என்பவரை இன்று (நவ.1) அதிகாலை கைது செய்தனர்.

News November 2, 2025

கள்ளக்குறிச்சி: இரயில்வே வேலை,ரூ.30 ஆயிரம் சம்பளம்!

image

ரயில்வேயின் கீழ் செயல்படும் ரயில்வே உணவு, சுற்றுலா நிறுவனத்தில் (ஐ.ஆர்.சி.டி.சி.,) காலிப்பணியிடங்கள் வெளியாகியுள்ளது. விருந்தோம்பல் கண்காணிப்பாளர் பிரிவில் மொத்தம் 64 காலிப்பணியிடங்கள் உள்ளது. இதற்கு,கல்வித்தகுதி பி.எஸ்சி.,/ பி.பி.ஏ.,/ எம்.பி.ஏ ஆகிய பட்டம் பெற்று இருக்கவேண்டும். இந்த பணிக்கு மாதம் ரூ. 30 ஆயிரம் சம்பளம் வழங்கப்பட உள்ளது. சி.ஐ.டி வளாகம், தரமணி நவ.15 தேதி நேர்காணல் நடைபெறுகின்றது.

error: Content is protected !!