News October 17, 2025

ரூ 5 கோடியில் திருமலை நாயக்கர் மஹாலில் டிஜிட்டல் ஒலி ஒளி காட்சி

image

மதுரையில் சரித்திர அடையாள பெருமைகளில் ஒன்றாக இருப்பது திருமலை நாயக்கர் மஹாலில் நடத்தப்பட்டு வரும் ஒலி ஒளி காட்சி சுற்றுலா பயணிகள் பொதுமக்களை மிகவும் கவர்ந்ததாக இருந்தது பழுதடைந்த இந்த காட்சி சேவையை புதுப்பிக்க ரூ 5 கோடி செலவில் லேசர் ஒலி ஒளி 3 டி புரஜக்சன் தொழில் நுட்பத்தில் நவீன முறையில் தயாராகிவரும் ஒலி ஒளி காட்சி பணிகள் நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது. இந்த சேவை டிசம்பருக்குள் துவக்கப்பட உள்ளது.

Similar News

News December 9, 2025

மதுரை அருகே தீவைத்து முதியவர் தற்கொலை

image

அத்திப்பட்டி வடக்கு தெரு சின்னபாண்டி 60, இவர் வீட்டில் டூ வீலருக்காக பாட்டிலில் பெட்ரோல் வாங்கி வைத்திருந்தார். நேற்று முன்தினம் இந்த பாட்டிலை எடுத்துக்கொண்டு, அதே ஊரில் உள்ள சுடுகாட்டுக்கு சென்று உடலில் பெட்ரோலை ஊற்றி அவரே தீ வைத்து காயம் அடைந்தார். உறவினர்கள் அவரை மீட்டு, மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவர் சிகிச்சை பலனின்றி, இறந்தார். சாப்டூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

News December 9, 2025

மதுரை: டிகிரி போதும்., தேர்வு இல்லாத SBI வங்கி வேலை!

image

மதுரை மக்களே, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 20 – 35 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் டிச. 23க்குள் இங்கு <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.51,000 வழங்கப்படும். இதற்கு தேர்வு கிடையாது. நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். இந்த பயனுள்ள தகவலை SHARE செய்யுங்க.

News December 9, 2025

மதுரை: தண்ணீர் என நினைத்து ஆசிட் குடித்த பெண் பலி

image

மதுரை வடக்கு ஆவணி மூல வீதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் மனைவி சுமதி(54). நேற்று இவருக்கு தாகம் எடுத்ததால் தண்ணீர் குடிக்க சமையலறைக்கு சென்று, தண்ணீர் என நினைத்து பிளாஸ்டிக் பாட்டிலில் இருந்த ஆசிட்டை எடுத்து தவறுதலாக குடித்துள்ளார். சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். திலகர் திடல் போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!