News October 11, 2025
தூத்துக்குடி: ஜாமீனில் வெளிவந்த நபர் கொலை!

தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அருகே கந்தையாவை கொலை செய்த வழக்கில் நிபந்தனை ஜாமீனில் வந்த சிவசூரியன் (32), நேற்று முன்தினம் காவல் நிலையம் சென்று திரும்பியபோது அவரை கார் மோதி கீழே தள்ளி, நான்கு பேர் கொண்ட கும்பல் ஆயுதங்களால் வெட்டியதில் சிவசூரியன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம்குறித்து கந்தையாவின் சகோதரர் ஆறுமுகம் உட்பட4 பேரை போலீசார் கைது செய்தனர்.
Similar News
News December 9, 2025
கிறிஸ்துமஸ் மைசூர் – தூத்துக்குடி சிறப்பு ரயில்

கிறிஸ்மஸ் பண்டிகையையொட்டி கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் மைசூரில் இருந்து தூத்துக்குடிக்கு சிறப்பு ரயில் விடப்படுகிறது. வரும் 23, 27 தேதிகளில் மைசூரில் இருந்து மாலை 6.35 மணிக்கு புறப்படும் ரயில் அடுத்த நாள் காலை 11 மணிக்கு தூத்துக்குடி வந்தடையும். தூத்துக்குடியில் இருந்து 24 மற்றும் 28 தேதிகளில் மதியம் 2 மணிக்கு புறப்படும் ரயில் அடுத்த நாள் காலை 7:45 மணிக்கு மைசூரு சென்றடையும்.
News December 9, 2025
கிறிஸ்துமஸ் மைசூர் – தூத்துக்குடி சிறப்பு ரயில்

கிறிஸ்மஸ் பண்டிகையையொட்டி கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் மைசூரில் இருந்து தூத்துக்குடிக்கு சிறப்பு ரயில் விடப்படுகிறது. வரும் 23, 27 தேதிகளில் மைசூரில் இருந்து மாலை 6.35 மணிக்கு புறப்படும் ரயில் அடுத்த நாள் காலை 11 மணிக்கு தூத்துக்குடி வந்தடையும். தூத்துக்குடியில் இருந்து 24 மற்றும் 28 தேதிகளில் மதியம் 2 மணிக்கு புறப்படும் ரயில் அடுத்த நாள் காலை 7:45 மணிக்கு மைசூரு சென்றடையும்.
News December 8, 2025
கார்த்தியை சோமவாரத்தை முன்னிட்டு 108 சங்காபிஷேகம்

கார்த்தியை சோமவார முன்னிட்டு கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை அருள்மிகு ஸ்ரீ பூவனநாத சுவாமி திருக்கோவிலில் கார்த்திகை 4-வது வார சோமவாரத்தை முன்னிட்டு காலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு திருவாந்தல் பூஜை மற்றும் 108 சங்காபிஷேக பூஜை, யாக சாலை பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


