News October 10, 2025
அரியலூர்: சுண்ணாம்புக்கல் சுரங்கம் குறித்து கருத்துகேட்பு

அரியலூர் மாவட்டம் அமீனாபாத் மற்றும் கயர்லாபாத் கிராமத்தில் அமைந்துள்ள தனியார் சிமெண்ட் ஆலையின் சுண்ணாம்புக்கல் சுரங்க குவாரிகளை 96.190 ஹெக்டேர் அளவிற்கு விரிவாக்கம் செய்ய உள்ளனர். இதற்கான பொதுமக்கள் கருத்துகேட்பு கூட்டம் கல்லங்குறிச்சி கிராமத்தில் உள்ள லால்குடியார் மண்டபத்தில் இன்று நடைபெற உள்ளது. மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தலைமை ஏற்று பொதுமக்களின் கருத்தினை கேட்க உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 9, 2025
அரியலூர் மாவட்ட மக்கள் கவனத்திற்கு

அரியலூர் மாவட்டத்தில் SIR பணிகள் கடந்த நவ.4-ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் டிச.11-ம் தேதியே SIR கீழ் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சொந்த ஊருக்கு சென்று விண்ணப்பம் நிரப்ப இயலாத நபர்கள் <
News December 9, 2025
அரியலூர்: 41 பேர் மீது வழக்கு பதிவு!

அரியலூர் மாவட்டத்தில், கடந்த வாரத்தில் போலீசார் பல்வேறு இடங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அதன்படி சட்டவிரோதமாக மது விற்பனை செய்த நபர்கள் மீது 8 வழக்குகளும், பொது இடங்களில் மது அருந்திய குற்றத்திற்காக 41 வழக்குகளும், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய 14 பேர் மீது வழக்குபதிவு. மேலும் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்ததற்காக 7 வழக்குகளும் பதிவு என எஸ்பி அலுவலகம் தெரிவித்தது.
News December 9, 2025
அரியலூர்: மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

தமிழ்நாடு அரசு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட உள்ள TNUSRB SI தேர்விற்கு விண்ணப்பித்து காத்திருக்கும் மாணவ, மாணவிகளுக்கான இலவச மாதிரி தேர்வு அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் வழிகாட்டல் மையத்தில், இம்மாதம் 12 மற்றும் 18ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது, என மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.


