News October 7, 2025
விழுப்புரம்: தீராத நோய் தீர்க்க இங்கு போங்க!

‘ஒவ்வொரு மனித உடலும் ஆலயம் போன்றது’ என்பது சித்தர்களின் வாக்கு. பணம், பதவி எது இருந்தாலும் நோய்நொடி இல்லாத வாழ்க்கையே சிறந்த செல்வம். தீராத நோய்களை தீர்க்கும் வைத்தீஸ்வரன் கோவில், விழுப்புரம் மாவட்டம் சிந்தாமணி நல்லூரில் அமைந்துள்ளது. இங்கு நவகிரகங்கள் அனைத்தும் ஒரே நேர்க்கோட்டில் அமைந்து, இறைவனின் கட்டளைக்குப் பணிந்து பக்தர்களின் நோய்களையும் தோஷங்களையும் போக்குவதாக ஐதீகம். ஷேர் பண்ணுங்க
Similar News
News November 14, 2025
விழுப்புரம்: பட்டாவில் பெயர் மாற்றமா..?

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் eservices.tn.gov.in என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது TN nilam citizen portal தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் அலைச்சல் இல்லாமல் பட்டாவில் எளிதாக பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம். இந்த தகவலை SHARE பண்ணுங்க!
News November 14, 2025
விழுப்புரத்தில் வீடு புகுந்து கொள்ளை ; போலீஸ் வலை!

விழுப்புரம்: ஆடல் நகர் பகுதியில் பாண்டியன் எனபவர் வீட்டின் பூட்டை உடைத்து மர்மநபர்கள் நுழைந்து ஒன்றரை கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் லேப்டாப்பை திருடிச் சென்றனர். வீட்டை பூட்டிவிட்டு கடலூரில் உறவினர் வீட்டிற்கு சென்றிருந்த அவர் திரும்பியபோது இது தெரிய வந்தது. இதுகுறித்து விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News November 14, 2025
இந்திய அளவில் கலக்கிய விழுப்புரம் காவலர்!

ஜம்மு – காஷ்மீரில் நடைபெற்ற அகில இந்திய காவல்துறை விளையாட்டு போட்டியில் விழுப்புரம் மாவட்ட முதல்நிலைக் காவலர் வருண்குமார் கராத்தே பிரிவில் மூன்றாம் இடம் பெற்று வெண்கல பதக்கம் வென்றார். கடந்த மாதம் 8 முதல் 16 வரை நடந்த போட்டியில் அவர் சிறப்பாக செயல்பட்டார். சாதனை புரிந்த வருண்குமாரையும், அவரது பயிற்சியாளர் குணசேகரனிடம் எஸ்.பி சரவணன் பாராட்டினார்.


