News September 30, 2025
கரூர் சென்றவர் ஏன் கள்ளக்குறிச்சி செல்லவில்லை; அன்புமணி

கரூர் சம்பவத்திற்கு நேரில் சென்ற முதல்வரும், துணை முதல்வரும் அன்று கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்புக்கு ஏன் நேரில் செல்லவில்லை என பாமக தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து சிவகாசியில் நடைபெற்ற ‘உரிமை மீட்க தலைமுறை காக்க’ நடைபயணத்தில் பேசியவர் கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றார்.
Similar News
News December 7, 2025
கள்ளக்குறிச்சி: காவல்நிலையத்தை முற்றுகையிட்ட கிராமம்!

ஏ.புத்துார் ஏரியில் முதியவர் இறந்து கிடந்தார். இதனால், அப்பகுதியைச் சேர்ந்த சிலர், ஏரி கரையை உடைத்து தண்ணீரை வெளியேற்றினர். ஆனால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடைபட்ட கரையை சீரமைத்தனர். தொடர்ந்து தி.மு.க., ஊராட்சி தலைவர் நந்தகுமார் வாக்குவாதம் செய்தார். இருதரப்பினரும் அளித்த புகாரில், நந்தகுமார் மீது வழக்கு பதியப்பட்டது. இதனால் நந்தகுமார், 50 பேருடன் வந்து காவல் நிலையத்தை முற்றுகையிட்டார்.
News December 7, 2025
கள்ளக்குறிச்சி: விசிக மண்டல பொறுப்பாளர் நியமனம்!

கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்டம் சங்கராபுரம் சட்டமன்றம் & ரிஷிவந்தியம் சட்டமன்றம் ஆகிய இரண்டு தொகுதிக்கு மண்டல துணைச் செயலாளராக பொன்னிவளவன் என்பவரை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிறுவன தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் நியமித்துள்ளார். இவர் இதற்கு முன் ஒருங்கிணைந்த கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி மண்டல செயலாளராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
News December 7, 2025
கள்ளக்குறிச்சி: விசிக மண்டல பொறுப்பாளர் நியமனம்!

கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்டம் சங்கராபுரம் சட்டமன்றம் & ரிஷிவந்தியம் சட்டமன்றம் ஆகிய இரண்டு தொகுதிக்கு மண்டல துணைச் செயலாளராக பொன்னிவளவன் என்பவரை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிறுவன தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் நியமித்துள்ளார். இவர் இதற்கு முன் ஒருங்கிணைந்த கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி மண்டல செயலாளராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


