News February 27, 2025
ஈஷாவில் களைகட்டிய மகா சிவராத்திரி

மகா சிவராத்திரி விழாவையொட்டி கோவை ஈஷா மையத்தில் சிவராத்திரி விழா கோலாகலமாக நடைபெற்றது. மத்திய உள்துறை அமைச்சர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார், பஞ்சாப் கவர்னர் குலாப் சந்த் கட்டாரியா, மத்திய இணையமைச்சர் எல்.முருகன், அண்ணாமலை, நடிகர்கள் சந்தானம், நடிகை தமன்னா, விஜய் வர்மா, ஓம்பிரகாஷ் மெஹ்ரா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Similar News
News February 27, 2025
அமைச்சர் KKSSR ராமச்சந்திரன் ஹாஸ்பிடலில் அனுமதி

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் உடல் நலக்குறைவால் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மூத்த அமைச்சரான அவருக்கு சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ ஹாஸ்பிடலில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது வழக்கமான பரிசோதனை எனக் கூறப்பட்டாலும், திமுக தலைவர்கள் பலரும் ஹாஸ்பிடலுக்கு விரைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
News February 27, 2025
இது தான் தன்னம்பிக்கையின் பலம்.. பெண் செய்த சாதனை

தென்கொரியாவின் ஜாங் இக் சன்னுக்கு 5 வயதில் ஆரம்பித்தது தசைநார் சிதைவு நோய். ஒவ்வொரு உறுப்புகளாக நோய் செயலிழக்க வைத்தது. ஆனாலும் படிக்க வேண்டும் என்ற அவரது ஆர்வத்தை மட்டும் நோயால் முடக்க முடியவில்லை. கண் அசைவு, பேச்சை வைத்து தேர்வெழுதி 37 வயதில் PG பட்டமே பெற்றுவிட்டார். முயற்சிக்கு பலன் நிச்சயம் என்பதற்கு ஜாங் உதாரணமாகி இருக்கிறார். எந்த பிரச்னை வந்தாலும் கலங்காதீங்க. NEVER EVER GIVEUP.
News February 27, 2025
கிராமத்து இயக்குநருடன் கைகோர்த்த SaNa

‘வம்சம்’, ‘நம்ம வீட்டு பிள்ளை’ படங்களை இயக்கிய பாண்டியராஜ், தற்போது விஜய் சேதுபதி நடிப்பில் ஒரு புதிய படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாண்டியராஜ் பெரும்பாலும் யுவன் சங்கர் ராஜா, டி.இமான் ஆகிய இசையமைப்பாளர்களுடனே பணியாற்றி வந்த நிலையில், தற்போது முதல்முறையாக சந்தோஷ் நாராயணனுடன் கைகோர்த்துள்ளதாக கூறப்படுகிறது.